302 டன் எடையுள்ள விமானத்தை கைகளால் இழுத்து துபாய் போலீசார் சாதனை

துபாய் போலீசார்

பட மூலாதாரம், FACEBOOK

துபாயில் வைரலாகி வரும் உடற்பயிற்சி சார்ந்த சவாலின் ஒரு பகுதியாக துபாய் போலீசார் 302 டன் எடையுள்ள ஏர்பஸ் A380 விமானத்தை கைகளால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளனர்.

உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக துபாயில் #dubaifitnesschallenge என்ற ஹாஸ்டேகுடன் தங்களது உடற்பயிற்சி மற்றும் பலத்தை வெளிப்படுத்தும் செயல்களை பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்நிலையில், துபாயின் போலீசார் 302 டன்கள் எடையுள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் A380 ரக விமானத்தை கைகளால் இழுத்து, நகர்த்தி உலக சாதனை படைத்துள்ளனர்.

இதுதொடர்பான காணொளியை தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள துபாய் போலீசார், இது ஒரே வாரத்தில் தாங்கள் நிகழ்த்தியுள்ள இரண்டாவது உலக சாதனை என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :