You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிப்ஸ் தரக் காசில்லாமல் ஐன்ஸ்டின் எழுதிய குறிப்புகள்: 17.4 லட்சம் டாலருக்கு ஏலம்
கொரியர் அஞ்சல் கொண்டுவந்தவருக்கு டிப்ஸ் கொடுக்க காசில்லாமல் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் எழுதிக் கொடுத்த இரண்டு குறிப்புகள் 17.4 லட்சம் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.
1922-ம் ஆண்டில் எழுதப்பட்ட இந்தக் குறிப்புகளில் ஒன்றில் எப்படிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும் என்பது பற்றிய தமது கருத்தை எழுதியிருந்தார் ஐன்ஸ்டின்.
ஜெர்மனியில் பிறந்து, நோபல் பரிசு பெற்றவரான ஐன்ஸ்டின் அப்போது ஓர் உரையாற்றுவதற்காக ஜப்பான் சென்றிருந்தார். அப்போது அவருக்கு வந்தக் கடிதம் ஒன்றை அவரது ஓட்டல் அறைக்கு கொண்டுவந்த கொரியர் ஊழியருக்கு டிப்ஸ் தருவதற்கு அவரிடம் காசு ஏதுமில்லை.
எனவே, அவர் தங்கியிருந்த டோக்கியோ இம்பீரியல் ஓட்டலின் குறிப்புத் தாளில் இரண்டு சிறு குறிப்புளை எழுதி, கையெழுத்திட்டு அந்த ஊழியரிடம் தந்தார்.
அந்தக் குறிப்புகளைத் தந்துவிட்டு, "உனக்கு அதிருஷ்டம் இருந்தால் இது மதிப்பு மிக்கதாகும்," என்று சொன்னார் ஐன்ஸ்டின்.
குறிப்பில் என்ன எழுதினார்?
"வெற்றியைத் தேடும் வாழ்க்கையில் எப்போதும் அமைதியின்றி தவிக்கும் நிலை இருக்கும். அமைதியான பணிவான வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்," என்று ஒரு குறிப்பில் எழுதியிருந்தார் ஐன்ஸ்டின். இந்தக் குறிப்பு 15 லட்சம் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.
இன்னொரு குறிப்பில் "மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். இந்தக் குறிப்புத் தாள் 2.4 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஏலம் போனது.
இரண்டு குறிப்புத் தாள்களும் ஏலத்துக்கு முன்னதாக மதிப்பிட்டிருந்த தொகையைவிட அதிக தொகைக்கு ஏலம் போயின என்று 'வின்னர்' ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்புகளைப் பெற்ற ஏல ஊழியரின் உறவினர் இந்தக் கடிதத்தை விற்பனை செய்தார். இக் குறிப்புகளை வாங்கிய ஐரோப்பியர் தமது பெயர் வெளியாவதை விரும்பவில்லை என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்