கண்ணாடி பரப்புகள் கொண்ட நவீன கட்டடங்கள் வௌவால்களுக்கு ஆபத்தா?
பெரும் கண்ணாடிப் பரப்புகள் அல்லது கண்ணாடியாலான மேற்பரப்புகள் கொண்ட நவீன கட்டடங்கள் வௌவால்களுக்கு ஆபத்தானவையாக இருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

பட மூலாதாரம், GREG WOOD/AFP/Getty Images
பல இறந்த அல்லது காயமடைந்த வௌவால்கள் கட்டடங்களுக்கு அருகே காணப்பட்டதை அடுத்து இந்த ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கினர்.
வௌவால்களின் மீது இது போன்ற கட்டடங்களின் தாக்கம் குறித்து கணிக்க மேலும் கண்காணிப்பு தேவைப்படுகின்றது என்று ஜெர்மனியில் உள்ள மேக் ப்ளாங்க் பறவை ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறினர்.

பட மூலாதாரம், Ian Waldie/Getty Images
தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலையைப் பற்றிய ஒரு ஒலி வடிவ வரைபடத்தை உருவாக்க வௌவால்கள் குரலெழுப்பி, அக்குரலின் எதிரொலிகளை கவனிக்கின்றன.
கண்ணாடி ஜன்னல்கள் அல்லது கண்ணாடிகளால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள், அவை ஒலியைப் பிரதிபலிக்கும் விதத்தால், வௌவால்களுக்கு ஒரு பார்க்கமுடியாத இடத்தை உருவாக்குகின்றன என்று கருதப்படுகிறது.
பிற செய்திகள்
- பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம் (சிறப்பு கட்டுரை)
- ஹரியானா சாமியாரின் ஆடம்பரத் தலைமையகத்தின் உள்ளே... (புகைப்படத் தொகுப்பு)
- "நீட்" போராட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை
- மெக்சிகோவை உலுக்கிய 8.2 நிலநடுக்கம்: பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை
- புற்றுநோயை எதிர்க்கும் 'உயிர் மருந்து': அமெரிக்கா அனுமதி
- சென்னை முதல் ஹ்யூஸ்டன் வரை: வெள்ளத்திற்கு யார் பொறுப்பு?
- உங்களுக்கு கருப்பு தொப்பியா? வெள்ளை தொப்பியா?! புதிர் - 14
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








