நீருக்கடியில் வாழ்க்கை - மலைக்க வைக்கும் தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு )

இரண்டாம் உலகப் போரின் போது நீருக்கடியில் சிக்கிக்கொண்ட ஒரு பிரிட்டிஷ் கப்பலின் புகைப்படத்தை எடுத்த ஜெர்மன் புகைப்படக் கலைஞர் டோபியாஸ் ஃப்ரைட்ரிக், 2018 ஆண்டின் நீருக்கடியில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படக் கலைஞர் என்ற விருதை பெற்றிருக்கிறார்.

எகிப்தின் ரஸ் முகம்மது கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் போட்டியில் கலந்து கொண்ட 5,000 புகைப்படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

'சைக்கிள் வார்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புகைப்படம், எஸ்.எஸ். திஸ்லெக்ரோம் என்ற பிரிட்டிஷ் கடற்படையின் வர்த்தக கப்பலில் மோட்டார் பைக்குகள் இருப்பதை தெளிவாக காட்டுகிறது.

சில வருடங்களாகவே இந்த புகைப்படத்தை எடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது, ஆனால், ஒரே ஷாட்டில் எடுக்கமுடியாது என்பதால் காத்துக் கொண்டிருந்த ஃப்ரைட்ரிக், பல புகைப்படங்களை எடுத்து அவற்றை ஒன்றாக இணைத்து ஒரே புகைப்படமாக்கினார்.

"இது மிகவும் அசாதாரணமான ஷாட். இதுபோன்ற காட்சியை புகைப்படமாக உருவகப்படுத்துவதில் கலைத்திறனும், புகைப்பட திறமையும் உறுதுணையாக உதவியிருக்கிறது" என்று புகைப்பட தேர்வுக்குழுத் தலைவர் பாராட்டினார்.

இந்த புகைப்பட போட்டியில் மேக்ரோ, வைட் ஆங்கிள், பிஹேவியர், ரெக் (Macro, Wide Angle, Behaviour and Wreck Photography), பிரிட்டன் கடற்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கு என மூன்று பிரிவுகளும் என்று 11 பிரிவுகளில் புகைப்படங்கள் வகைப்படுத்தப்பட்டன.

புகைப்படங்கள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டவை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :