ரஷ்யாவுடன் சேர்ந்து அமெரிக்க நட்புறவை சோதிக்கும் சௌதி - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

கச்சா எண்ணெய், சௌதி அரேபியா, ரஷ்யா, சீனா, இந்தியா,

பட மூலாதாரம், Reuters

சௌதி அரேபியாவும் ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை தொடர்ந்து குறைக்கப் போவதாக அறிவித்துள்ளன.

இந்த அறிவிப்பு 2023-ஆம் ஆண்டின் மீதமுள்ள மூன்று மாதங்களுக்கானது. இரு நாடுகளின் இந்தக் கூட்டு அறிவிப்பு, உலகம் முழுவதும் எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக, கடந்த ஓராண்டில், முதன்முறையாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.

2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 75 முதல் 85 அமெரிக்க டாலர்கள் வரை இருந்தது.

சௌதி அரேபியா ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் கச்சா எணெய் உற்பத்தியை அறிவித்துள்ளது. ரஷ்யா ஒரு நாளைக்கு மூன்று மில்லியன் பீப்பாய்கள் குறைப்பதாக அறிவித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, சௌதி அரேபியா மற்றும் ரஷ்யாவின் சமீபத்திய இந்த முடிவிற்குப் பிறகு, 10 மாதங்களில் முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை அதிகபட்ச அளவை எட்டியிருக்கிறது.

உற்பத்திக் குறைப்பு அறிவிப்பை முதலில் வெளியிட்ட சௌதி அரேபியா

இந்த ஆண்டு கோடையின் துவக்கத்தில், முதலில் சௌதி அரேபியாதான் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து சௌதி அரேபியா ஒவ்வொரு மாதமும் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து வருகிறது.

கடந்த செவ்வாயன்று, சௌதியும் ரஷ்யாவும் எண்ணெய் உற்பத்திக் குறைப்பை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்தபோது, நிபுணர்கள் ஆச்சரியமடைந்தனர்.

இந்த இரு நாடுகளின் இந்த முடிவு, தேவை மற்றும் விநியோகத்தின் மீதான தமது பிடியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக எண்ணெய் விலை அதிகரிக்கும்.

ரஷ்யா மற்றும் சௌதி அரேபியா இணைந்து எடுத்த இந்த முடிவு, பெரும் ஏற்றுமதியாளர்களிடையே இருக்கும் ஒற்றுமையைக் காட்டுவதாகப் பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 1% குறையும். இருப்பினும், ரஷ்யாவின் உற்பத்திக் குறைப்பைப் பற்றி அறிவது கடினம்.

யுக்ரேன் போர் காரணமாக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளால் எண்ணெய் விற்பனை செய்வதில் ரஷ்யா சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை அமெரிக்கா உள்ளிட்டப் பிற நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எரிசக்தி புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த நாடுகள் அதிகரித்த எண்ணெய் விலை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் சவால்களை சமாளித்துக்கொண்டிருக்கின்றன.

ரஷ்யா-சௌதியின் உற்பத்திக் குறைப்பு நடவடிக்கையால் மற்ற நாடுகளின் இந்த முயற்சிகளுக்கும் பாதிப்புக்குள்ளாகும்.

கச்சா எண்ணெய், சௌதி அரேபியா, ரஷ்யா, சீனா, இந்தியா,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம், சௌதி அரேபியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே எண்ணெய் விலை தொடர்பாக ஒரு மோதல் ஏற்பட்டது

ரஷ்யாவுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையே இருந்த பதற்றம்

2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம், சௌதி அரேபியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே எண்ணெய் விலை தொடர்பாக ஒரு மோதல் ஏற்பட்டது.

சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலையின் வீழ்ச்சியைச் சமாளிக்கும் வகையில் ரஷ்யா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று சௌதி அரேபியா விரும்புகிறது. ஆனால் உற்பத்தியைக் குறைக்க ரஷ்யா தயாராக இல்லை.

ரஷ்யாவின் அணுகுமுறையால் எரிச்சலடைந்த சௌதி அரேபியா உற்பத்தியை அதிகரித்து, சலுகை விலையில் எண்ணெய் விற்க முடிவு செய்திருந்தது. உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொறு காரணமாக அனைத்து வணிகங்களும் ஸ்தம்பித்த நிலையில் சௌதி அரேபியா இந்த முடிவை எடுத்தது.

விலை வீழ்ச்சிக்கு இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டன. சௌதி தனது கரன்சியான ரூபிளின் வீழ்ச்சிக்கு ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி சௌதி அரேபியா மீது குற்றம் சாட்டியது.

மறுபுறம், சௌதி அரேபியாவும் பதிலடி கொடுக்க முடிவு செய்தது. ஏப்ரல் 1-ஆம் தேதி, சௌதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான அரம்கோ ஒவ்வொரு நாளும் 12 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்யும் என்று கூறியது.

இது ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை விட 26% அதிக உற்பத்தியாகும். ரஷ்யாவுடனான விலைப் போரில் தங்கள் முன்னிலையை நிரூபிப்போம் என்று சௌதி அரேபியா நினைத்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில், எண்ணெய் உலகில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றின் தாக்கம் மிகவும் பரந்த அளவில் உள்ளது.

முதலாவதாக, அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் இறக்குமதியாளராக இருந்த அமெரிக்கா, இப்போது உலகின் முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது.

இரண்டாவது, எண்ணெய் விலையை நிலையாக வைத்திருக்க ரஷ்யா மற்றும் சௌதி அரேபியா இடையேயான ஒத்துழைப்பு. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சௌதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளும் உலகில் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்.

அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. ரஷ்யாவுக்கும் சௌதி அரேபியாவும் இரண்டாவது இடத்திற்குப் போட்டியிடுகின்றன. ரஷ்யாவுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு சமீப காலமாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் (OPEC) சௌதி அரேபியா அதிகபட்ச ஆதிக்கம் செலுத்துகிறது. 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம், கோவிட்-19 காரணமாக எண்ணெய் தேவையில் பெரும் சரிவு ஏற்படவே, சௌதி அரேபியா OPEC மூலம், எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முன்மொழிந்தது.

ரஷ்யா OPEC-இல் உறுப்பினராக இல்லை. மேலும் சௌதி அரேபியாவின் முன்மொழிவுடன் உடன்பட மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளிலும் எண்ணெய் விலைப் போர் வெடித்தது.

ரைஸ் பல்கலக்கழகத்தின் பேக்கர் நிறுவனத்தின் எரிசக்தி நிபுணர் ஜிம் கிரெய்ன், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், "எண்ணெயின் விலை எப்போதும் உச்சத்திலேயே இருக்காது என்பது அரபுத் தலைவர்களுக்குத் தெரியும். இதனால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின்-சல்மான் ' Vision 2030' என்ற கொள்கையை அறிமுகப்படுத்தினார்,” என்று கூறியிருந்தார்.

கச்சா எண்ணெய், சௌதி அரேபியா, ரஷ்யா, சீனா, இந்தியா,

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது அல்லது குறைப்பது குறித்து, ஒவ்வொரு மாதமும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று சௌதி அரேபியா தெரிவித்துள்ளது

சௌதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை மேலும் குறைக்கலாம்

எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது அல்லது குறைப்பது குறித்து, ஒவ்வொரு மாதமும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.

The New York Times இதழில் வந்த ஒரு செய்தியின்படி, சௌதி அரேபியா அதன் முக்கிய வருமான ஆதாரமான வலுவான எண்ணெய்ச் சந்தைக்கு ஆதரவாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த இலக்கை அடைய, வளரும் பொருளாதாரங்கள் மற்றும் அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளுடனான உறவுகளைச் சோதனைக்கு உள்ளாக்கும் முயற்சிகளையும் எடுக்க சௌதி அரேபியா தயாராக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

‘எனர்ஜி ஆஸ்பெக்ட்ஸ்’ ஆராய்ச்சி நிறுவனத்தின் புவிசார் அரசியல் ஆய்வின் தலைவராக இருக்கும் ரிச்சர்ட் ப்ரோன்ஸ், ‘தி நியூயார்க் டைம்’ஸிடம் கூறியிருந்ததன் படி, சந்தையை இறுக்கமாக வைத்திருப்பது தனது கடமையாக சௌதி அரேபியா கருதுகிறது.

சௌதி அரேபியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் இளவரசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் மிகவும் ஆக்ரோஷமான கொள்கைகளுடையவர்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து அப்துல் அசீஸின் அறிக்கைகளை சந்தை புறக்கணித்து வருகிறது. அப்துல் அசீஸ் பட்டத்து இளவரசர் சல்மானின் சகோதரர் ஆவார்.

கடந்த சில வாரங்களாக, எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, தேவை அதிகரித்துள்ளதால், எண்ணெய் விலை அதிகரித்து, உலகப் பொருளாதாரத்தை கவலையடையச் செய்துள்ளது.

கச்சா எண்ணெய், சௌதி அரேபியா, ரஷ்யா, சீனா, இந்தியா,

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சௌதி போன்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு சீனா ஒரு பெரிய சந்தை

நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வைச் சந்திக்கும் சீனா

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கச்சா எண்ணெயின் விலை 20% உயர்ந்துள்ளது. சீனா பொருளாதார ரீதியாகச் சவால்களை எதிர்கொண்டுள்ள நேரத்தில் இது நிகழ்ந்துள்ளது.

சௌதி போன்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு சீனா ஒரு பெரிய சந்தை.

‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழின்படி, அதிகரித்த எண்ணெய் விலை ரஷ்யாவிற்குச் சாதகமாக கருதப்படுகிறது. ஆனால் இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு அடியாக இருக்கலாம்.

கச்சா எண்ணெயை பேரல் ஒன்றுக்கு 90 அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் விற்பது சௌதிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதலுக்கு வழிவகுக்கும். எவ்வாறாயினும், அமெரிக்காவின் கவனம் தற்போது சௌதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை வளர்ப்பதிலேயே உள்ளது.

இதற்கிடையில், சௌதி அரேபியா ஒரு நாளைக்கு 9 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்யும் என்று சௌதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உற்பத்தி கடந்த ஆண்டை விட 20 லட்சம் பீப்பாய்கள் குறைவாகும்.

கச்சா எண்ணெய், சௌதி அரேபியா, ரஷ்யா, சீனா, இந்தியா,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக இந்தியா மற்றும் சீனா மூலம் ஐரோப்பா எண்ணெய் வாங்குவதாக ‘The Center for Research on Energy and Clean Air’ தெரிவித்துள்ளது

ரஷ்யாவின் மீதான மேற்கத்தியத் தடைகளும்

ரஷ்ய-யுக்ரேன் போர் துவங்கிய பின்னர் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன. அப்போதிருந்து, இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து விலகிக் கொண்டன.

யுக்ரேன் போர் துவங்கிய பிறகு ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது 1,350% அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், ஐரோப்பாவில் மிகப்பெரிய எரிபொருள் ஏற்றுமதியாளராக இந்தியா மாறியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக இந்தியா மற்றும் சீனா மூலம் ஐரோப்பா எண்ணெய் வாங்குவதாக ‘The Center for Research on Energy and Clean Air’ தெரிவித்துள்ளது.

எரிசக்திப் புலனாய்வு அறிக்கையின்படி, இந்த ஆண்டின் துவக்கத்தில் ரஷ்யா தனது எண்ணெய் உற்பத்தியில் ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் பீப்பாய்கள் குறைப்பதாக அறிவித்தது. ஆகஸ்டில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை குறைப்பதாக அறிவித்தது.

இந்தக் குறைப்பு செப்டம்பர் மாதத்தில் ஒரு நாளைக்கு மூன்று லட்சம் பீப்பாய்கள் என்ற மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக சரிந்துள்ளது.

எரிசக்திப் புலனாய்வு, ரஷ்ய அதிகாரிகள் தொடர்பான ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஆகஸ்ட் மாதம், ரஷ்யா சராசரியாக சுமார் 4.3 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை முன்னர் சோவியத் யூனியனில் இடம்பெறாத நாடுகளுக்கு வழங்கியது. இந்த எண்ணிக்கை ஜூலையை விட அதிகமாக இருந்தது.

ஆகஸ்டில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முதல் ஏழு மாதங்களில் இருந்ததை விட ஒரு நாளைக்கு சுமார் 3,40,000 பீப்பாய்கள் குறைவாக இருந்ததாக எரிசக்திப் புலனாய்வு மதிப்பிட்டுள்ளது.

இந்த முடிவு ரஷ்யாவின் கவனம் எண்ணெயை சேமிப்பதை விட அதற்கு அதிக விலையைப் பெறுவதில் உள்ளது என்பதைக் காட்டுகிறது.

ரஷ்ய எண்ணெய் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் பார்வையில் இந்த முடிவு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

கச்சா எண்ணெய், சௌதி அரேபியா, ரஷ்யா, சீனா, இந்தியா,

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கச்சா எண்ணெய் உற்பத்தியில், சௌதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யா உள்ளது

எண்ணெய்ச் சந்தையில் சௌதி அரேபியா மற்றும் ரஷ்யாவின் இடம்

உலகிலேயே அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு சௌதி அரேபியா. ஒரு நாளைக்கு 10 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் எண்ணெய் உற்பத்தி செய்கிறது.

எண்ணெய் உற்பத்தியில், சௌதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யா உள்ளது.

அல் ஜசீராவின் ஒரு செய்தி அறிக்கையின்படி, ரஷ்யா ஒரு நாளைக்கு சுமார் 97 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்கிறது.

சௌதி அரேபியாவின் எண்ணெயை வாங்குவதில் சீனா முதலிடத்தில் உள்ளது. சௌதி அரேபியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது.

2021-ஆம் ஆண்டில், சீனா மற்றும் சௌதி அரேபியாவுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் 87 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.

ரஷ்யாவிலிருந்து சீனாவின் எண்ணெய் இறக்குமதி கடந்த ஓராண்டில் சுமார் 40 மில்லியன் டன்னிலிருந்து 57.7 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.

அதே சமயம், கடந்த ஓராண்டில், ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது, 30 லட்சம் டன்னில் இருந்து, 5.59 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய், சௌதி அரேபியா, ரஷ்யா, சீனா, இந்தியா,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த ஆண்டு ஜூன் மாதம், ரஷ்யாவிலிருந்து இந்தியா தினமும் சுமார் 20 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா

இந்த ஆண்டு ஜூன் மாதம், ரஷ்யாவிலிருந்து இந்தியா தினமும் சுமார் 20 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது.

ஜூன் மாதத்தில் இந்தியா ஒரு நாளைக்கு மொத்தம் 40 லட்சம் பீப்பாய்கள் எண்ணெயை இறக்குமதி செய்தது .இதில் ரஷ்யாவின் பங்கு சுமார் 45% இருந்தது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு அதிகமாக இருந்தது.

2021-2022ல் ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது வெறும் 2% ஆக இருந்தது, தற்போது 20%-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் பாரம்பரிய எண்ணெய் விநியோகஸ்தர்களான சௌதி அரேபியா மற்றும் ஈராக்கை ரஷ்யா பின்னுக்குத் தள்ளியிருக்கிறாது.

ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 44 பில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது. இதில் பெரும் பகுதி எண்ணெய் இறக்குமதியாகும்.

ரஷ்யாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி மிகவும் குறைவு. ஏப்ரல் 2022 முதல் ஜனவரி 2023 வரை ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 34 பில்லியன் அமெர்க்க டாலர்கள் ஆகும்.

ரஷ்யா யுக்ரென் மீது போர் தொடுத்த போது, மேற்கத்திய நாடுகள் அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அமெரிக்காவும் எதிர்பார்த்தது.

2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் இதைப் பற்றி கேட்டபோது, "இந்தியா எண்ணெயை வாங்குவது பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள். ஆனால் ஐரோப்பா ஒரு மதிய வேளையில் வாங்கும் எண்ணெயைக் கூட இந்தியா ஒரு மாதத்தில் வாங்குவதில்லை," என்று கூறினார்.

ஜெய்சங்கரின் இந்த கருத்து அப்போது விவாதப் பொருளானது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: