பரிசோதனை முடிவு இயல்பாக இருந்தும் சில பெண்கள் கருத்தரிக்காதது ஏன்? ஐ.வி.எப். தான் ஒரே தீர்வா?

பட மூலாதாரம், Getty Images
இந்தி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை டெபினா பானர்ஜி தனது இரண்டாவது மகள் திவிஷாவை 'அதிசய குழந்தை' என்று அழைக்கிறார்.
டெபினா பானர்ஜி தனது பல நேர்காணல்களில் தனது இரண்டாவது கர்ப்பத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார். திவிஷாவின் பிறப்பு அவருக்கு ஒரு அதிசயம் போன்றது.
அவருக்கு ஏப்ரல் 2022 இல், முதல் மகள் லியானா செயற்கை கருத்தரிப்பு முறைகளில் ஒன்றான ஐ.வி.எப் (In Vitro Fertilization) தொழில்நுட்ப முறையில் பிறந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இந்த கர்ப்பம் முற்றிலும் சாதாரணமானது.
முதல் மகள் பிறந்து ஏழு மாதங்களில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. அது முதிர்ந்த பிரசவம். இப்போது அவர் தனது கணவர் குர்மீத் சவுத்ரி மற்றும் இரு மகள்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில், அவர் தனது இரண்டாவது மகள் திவிஷாவுக்கு வாரணாசியில் முடி காணிக்கை செலுத்தினார்.
இயல்பான கருத்தரிப்பு சாத்தியம்
நொய்டாவில் வசிக்கும் மற்றும் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஜோடி திருமணமான பத்து ஆண்டுகளுக்குப் பிறகு IVF தொழில்நுட்பத்தின் உதவியை எடுத்துக்கொண்டது.
முதல் குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் இரண்டாவது முறையாக பெற்றோரானார்கள். இந்த இரண்டாவது முறையாக கருத்தரித்தல் ஒரு சாதாரண கர்ப்பம்.
இரண்டாவது முறையாக தாயான மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மிதாலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) "முதலில் ஐவிஎஃப் செய்தால் இரண்டாவது குழந்தைக்கும் ஐவிஎஃப் செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் சாதாரண கர்ப்பம் சாத்தியம் என்று மருத்துவர்கள் உறுதியளித்தனர், அது எங்களுக்கு நடந்தது."
IVF மூலம் கருத்தரித்த பிறகு சாதாரண கர்ப்பத்தின் எடுத்துக்காட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வாடகைத் தாய் மற்றும் IVF நுட்பங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் நம்புகின்றனர்.
ராஞ்சியைச் சேர்ந்த டாக்டர் ரூபஸ்ரீ புருஷோத்தம் கூறுகையில், “IVF முறையில் முதல் கருத்தரிப்பிற்கு ஒவ்வொரு முறையும் அதே முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை. இங்கு பல பெண்களின் இரண்டாவது கர்ப்பம் முற்றிலும் இயல்பானதாக இருந்துள்ளது மற்றும் அவர்களது குழந்தைகள் இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர்.”

பட மூலாதாரம், INSTAGRAM/DEBINA BONNERJEE
இப்படி நடப்பதற்கான காரணங்கள் என்ன ?
டாக்டர் ரூபஸ்ரீ புருஷோத்தம் பிபிசியிடம் பேசுகையில், “IVFக்குப் பிறகு சாதாரண கர்ப்பத்தை நாங்கள் அடிக்கடி சந்திக்கிறோம், இது சாதாரணமானது. உண்மையில், வயதான காலத்தில் திருமணம் அல்லது சில நேரங்களில் மருத்துவ காரணங்களால் சில பெண்களுக்கு குழந்தையின்மை ஏற்படுகிறது.
"பின்னர் அவர்கள் IVF மூலம் கருத்தரிக்க எங்களிடம் வருகிறார்கள். ஆனால், முதல் குழந்தை பிறந்த பிறகு, அவர்களின் மன அழுத்தம் முடிந்துவிட்டது. அவர்கள் சந்தோஷமாக சாதாரண கர்ப்பத்தின் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இது குறித்து மேலும் அவர் பேசுகையில், “வயதான, குழந்தையில்லாத பெண்களுக்கு பொதுவாக தைராய்டு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்ற புகார்கள் இருக்கும். இந்த காரணத்திற்காக, IVF க்கு பின் கர்ப்பமாகிவிட்ட பிறகு, அவர்கள் இரண்டாவது குழந்தைக்கும் IVF ஐ நாட வேண்டியிருக்கும்.,
“எனவே IVFக்குப் பிறகு இயல்பான பிரசவ விகிதம் சற்று குறைவாக உள்ளது. ஆனால், அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால், சாதாரணமாக இரண்டாவது கர்ப்பம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.” என்றார்.
டாக்டர் ரூபஸ்ரீயின் வார்த்தைகளை இந்தியாவில் நன்கு அறியப்பட்ட வாடகைத் தாய் நிபுணரான டாக்டர் நயனா படேலும் ஒப்புக்கொள்கிறார்.
IVF-ஐ தொடர்ந்து சாதாரண கர்ப்பத்திற்கு நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகள் இருப்பதாக அவர் பிபிசியிடம் கூறினார்.
ஆனால் இதற்கு அந்த தம்பதியினர் மகிழ்ச்சியாகவும், மன அழுத்தமின்றியும் இருப்பது அவசியம்.
டாக்டர் நயனா படேல், “ஐவிஎஃப் செய்த பிறகும் ஒரு பெண்ணுக்கு நல்ல முட்டை தரம் இருந்தால், அவளது கருப்பைகள் இயல்பாகவும், கணவனின் விந்தணு எண்ணிக்கை இயல்பாக இருந்தால், அத்தகைய பெண்கள் சாதாரண முறையில் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரிக்கிறார்கள்."
"ஏனென்றால், முதல் குழந்தையின் பிரசவத்திற்குப் பிறகு, அவர்களின் மன அழுத்தம் அதிகமாகும் அல்லது குறையும். அவர்களின் பாலியல் வாழ்க்கை நன்றாக இருக்கும். இந்த சூழ்நிலைகளில், அவர்களின் இயல்பான கர்ப்பம் முற்றிலும் இயல்பானது."
ஆய்வுகள் கூறுவது என்ன ?

பட மூலாதாரம், Getty Images
IVF க்குப் பிறகு சாதாரண கர்ப்பம் பற்றிய ஒரு ஆராய்ச்சிக்குப் பிறகு, ஐந்தில் ஒருவர் அதாவது 20 சதவிகிதம் பெண்கள் IVF முறையிலான கர்ப்பத்திற்குப் பிறகு சாதாரண முறையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் முதல் கர்ப்பமான மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
இந்த ஆய்வுக் கட்டுரை கடந்த மாதம் (ஜூன் 21) 'மனித இனப்பெருக்கம்' என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் IVF கர்ப்பத்திற்குப் பிறகு இயற்கையாக இரண்டாவது முறையாக கருத்தரித்த இங்கிலாந்தைச் சேர்ந்த 22 பெண்களுடனான நேர்காணல்களும் இதில் அடங்கும்.
இப்போது இந்த புள்ளிவிவரங்கள் உலகம் முழுவதும் விவாதத்தில் உள்ளன.
1980 மற்றும் 2021 க்கு இடையில் உலகெங்கிலும் 5000 க்கும் மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட 11 ஆராய்ச்சியின் தரவுகளை ஆய்வு செய்த பின்னர், லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் EGA இன்ஸ்டிட்யூட் ஃபார் வுமன்ஸ் ஹெல்த் ( (Institute of Women Health) டாக்டர் அனெட் த்வைட்ஸ் தலைமையிலான நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு இதைக் கூறியுள்ளது.
இந்த குழுவில் டாக்டர் அன்னெட் த்வைட்ஸுடன், டாக்டர் ஜெனிபர் ஹால், டாக்டர் ஜூடிஃப் ஸ்டீபன்சன் மற்றும் டாக்டர் ஜெரால்டின் பாரெட் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த அறிக்கையை ஏற்று, டில்லியில் 'பெமினிஸ்ட்' என்ற ஐவிஎஃப் கிளினிக்கை நடத்தி வரும் டாக்டர் சௌஜன்யா அகர்வால், ஐவிஎஃப்க்குப் பிறகு சுமார் 20 சதவீத பெண்கள் இயற்கையாகவே கர்ப்பமாகலாம் என்கிறார்.
அவர் கூறுகையில், “உண்மையில் பெண்களின் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது கணவரின் விந்தணு எண்ணிக்கை சரியில்லாமல் இருந்தாலோதான் ஐவிஎஃப் நிலை வரும். பின்னர் IVF செய்யுங்கள். இந்த கர்ப்ப காலத்தில் சிறு பிரச்சனைகள் நீங்கும்.
இருப்பினும், சௌஜன்யா அகர்வால், IVF க்கு உட்படுத்தப்படும் பெரும்பாலான பெண்கள், அடுத்த முறை IVF செய்யப்பட வேண்டுமா என்பதை அறிய விரும்புகிறார்கள் என்றும் நம்புகிறார்.
அவர் மேலும் பேசுகையில்,“மக்கள் கேட்கிறார்கள். பலமுறை கேட்டுக்கொண்ட இருக்கிறார்கள். ஆனால், இதற்கான பதில் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் மற்றும் அந்த சிகிச்சைக்கு செல்வதற்கு முன் பல சோதனைகள் செய்ய வேண்டியிருக்கும். அனைத்து சோதனைகளும் இயல்பானதாக இருந்தால், இரண்டாவது முறையாக சாதாரண கர்ப்பத்திற்கான வாய்ப்புகள் உள்ளன.
எல்லா சோதனைகளும் இயல்பான பிறகும் ஏன் IVF வருகிறது என்று பதிலளித்த சௌஜன்யா, “எல்லாமே இயல்பானதாக இருந்தாலும், சில பெண்களால் கருத்தரிக்க முடியவில்லை. இதை மருத்துவத்தில் விவரிக்க முடியாத குழந்தையின்மை என்கிறோம். இதுபோன்ற நிகழ்வுகளும் நிகழ்கின்றன. இந்த மாதிரியான சூழல்களிலும், இரண்டாவது முறை சாதாரண கர்ப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
IVF முறை எப்போது தொடங்கியது ?
IVF தொழில்நுட்பம் முதன்முதலில் 1978ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. ஒரு புள்ளிவிபரத்தின்படி, இதுவரை உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் இந்த முறைப்படி பிறந்துள்ளனர்.
IVF முறையில் கருத்தரித்த பிறகு சாதாரண கர்ப்பம் பற்றிய ஆய்வுகள் உள்ளன. அத்தகைய ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்ட தரவுகள் புதிய ஆய்வில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












