ஐ.பி.எல். அறிமுக ஆட்டத்தில் மகன் பந்துவீசும் போது சச்சினை நேரலையில் பார்த்தீர்களா? அவர் எங்கே இருந்தார் தெரியுமா?

பட மூலாதாரம், BCCI/IPL
இந்திய கிரிக்கெட் அரங்கில் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒரு விஷயம் நேற்று நடந்தேறியுள்ளது. ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களம் கண்டுள்ளார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் முதன் முறையாக ஐ.பி.எல்.லில் கால் பதித்துள்ளார்.
கடந்த 2 வாரங்களாக பெரும் ஆரவாரத்துடன் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு ஆட்டங்கள் நடந்தன. ரசிகர்களுக்கு சிறந்த ஞாயிறு விருந்தாக அமைந்த இரு ஆட்டங்களிலும் பல சாதனைகள் படைக்கப்பட்டன.
முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்காக 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெங்கடேஷ் சதம் அடித்து சாதித்தார். இரண்டாவது போட்டியில், சஞ்சு சாம்சனும், ஹெட்மேயரும் தங்களது அசாத்தியமான பேட்டிங்கால் குஜராத் டைட்டன்சுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இந்த போட்டியில் 18 வயதேயான ஆப்கனைச் சேர்ந்த நூர் அகமது அறிமுக வீரராக களமிறங்கி, சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தி கவனம் பெற்றார்.
ஆனால், இவர்கள் அத்தனை பேரையும் தாண்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது அர்ஜூன் டெண்டுல்கர்தான்.
அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுகம்
கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகனான அவர் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நேற்றைய ஆட்டத்தில் அறிமுகமானார். அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் தொப்பியை கேப்டன் ரோகித் சர்மா அணிவித்ததுடன், கட்டியணைத்தும் வாழ்த்து கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா களம் காணாததால், கேப்டன் பொறுப்பை சூர்யகுமார் யாதவ் கவனித்துக் கொண்டார். டாஸ் வென்று பீல்டிங் செய்ய தீர்மானித்த அவர், முதல் ஓவரை வீசும் வாய்ப்பை அர்ஜூன் டெண்டுல்கருக்கு வழஙகினார்.
அர்ஜூன் டெண்டுல்கரின் பந்துவீச்சு எப்படி?
இடதுகை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய முதல் பந்தை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தொடக்க வீரர் ரமானுல்லா குர்பாஸ் எதிர்கொண்டார். அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. இரண்டாவது பந்தில் 2 ரன்னும், மூன்றாவது பந்தில் ஒரு ரன்னும் எடுக்கப்பட்டன.
அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய நான்காவது பந்தை எதிர்கொண்ட கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு விளையாடும் தமிழ்நாடு வீரர் ஜெகதீசன், பந்தை மிஸ் செய்யவே அது அவரது கால் காப்பில் பட்டது. உடனே மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் எல்.பி.டபிள்யூ. கேட்க, மைதானத்தில் திரண்டிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. ஆனால், நடுவர் அதனை நிராகரித்துவிட்டார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்வது குறித்த விவாதித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள், அது வேண்டாம் என்று தீர்மானித்தனர். ரீப்ளேவில் பந்து ஸ்டம்பை விட்டு சற்று உயரமாக சென்றது தெரிந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
ஐந்தாவது பந்தில் ரன் கொடுக்காத அர்ஜூன் டெண்டுல்கர் கடைசிப் பந்தில் ஒரு ரன் விட்டுக் கொடுத்தார். ஐ.பி.எல். அறிமுக போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கரின் முதல் ஓவர் சிறப்பானதாகவே அமைந்திருந்தது. அந்த ஓவரில் 4 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால், அவர் வீசிய இரண்டாவது ஓவர் அப்படி அமையவில்லை.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆட்டத்தில் சதம் அடித்த சாதித்த வெங்கடேஷ், இந்த ஓவரில்தான் அதிரடி அவதாரம் எடுத்தார். மூன்றாவது பந்தில் 2 ரன்கள் எடுத்த அவர், கடைசி இரு பந்துகளில் பவுண்டரியும், சிக்சரும் விளாசினார். அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு வைடும் போட, இந்த ஓவரில் மொத்தம் 13 ரன்களை அவர் விட்டுக் கொடுத்திருந்தார்.
நேற்றைய ஆட்டத்தில் அதன் பிறகு அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் மொத்தம் 2 ஓவர்களை வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. வெங்கடேஷ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, 2 ஓவர்களில் 6 பந்துகளை டாட் பாலாக வீசியிருந்தார் அர்ஜூன் டெண்டுல்கர்.

பட மூலாதாரம், BCCI/IPL
அறிமுக போட்டியில் ஒப்பீட்டளவில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த அர்ஜூன் டெண்டுல்கருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. மும்பை அணி எந்த சிக்கலும் இன்றி 14 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டிவிட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் டிரெண்டான அர்ஜூன் டெண்டுல்கர்
ஐ.பி.எல். அறிமுக போட்டியில் முதல் ஓவரை வீச பந்துடன் அர்ஜூன் டெண்டுல்கர் ஓடி வரும் போதே ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வலம் வரத் தொடங்கிவிட்டார். கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அர்ஜூன் டெண்டுல்கரை வாழ்த்தி பதிவிட்ட வண்ணம் இருந்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
அர்ஜூன் டெண்டுல்கருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்தாலும் கூட, அவரது பந்துவீச்சு குறித்த சில விமர்சனங்களும் வரவே செய்தன.
அவர் இன்னும் வேகமாக பந்துவீச முயற்சிக்க வேண்டும் என்று சிலரும், இளம் வீரரான அர்ஜூன் டெண்டுர்கர் தனது திறமையை நிரூபிக்க போதுமான கால அவகாசம் தர வேண்டும் என்று சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
மகனுக்கு தந்தை அளித்த செய்தி என்ன?
ஐ.பி.எல். அறிமுகப் போட்டியில் விளையாடிய அர்ஜூன் டெண்டுல்கருக்கு ட்விட்டர் மூலமாக தந்தையும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்தார்.
ட்வீட்டின் முதல் பகுதியில், கிரிக்கெட் தொடர்பாக மகனுக்கு சில அறிவுரைகளை அவர் வழங்கியிருந்தார். "கிரிக்கெட் வீரராக மேலும் ஒரு அடியை நீ எடுத்து வைத்துள்ளாய். உன் தந்தையாக, நான் உன்னை நேசிக்கிறேன். உன்னுடைய விளையாட்டில் நானும் ஆர்வமாக இருக்கிறேன். கிரிக்கெட் விளையாட்டுக்கு உரிய மரியாதையை நீ வழங்குவாய் என்று தெரியும். அதனை விளையாட்டு உனக்கு திருப்பித் தரும்" என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
ட்வீட்டின் இரண்டாவது பகுதியில், "அர்ஜூன், நீ இதனை அடைய கடுமையாக உழைத்துள்ளாய். அதனை தொடர்வாய் என்று எனக்குத் தெரியும். இது உன்னுடைய அழகான பயணத்தின் தொடக்கம்தான். வாழ்த்துகள்" என்று மகனை அவர் வாழ்த்தியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
மகனுக்கு வாழ்த்து தெரிவித்து சச்சின் பதிவிட்ட ட்வீட்கள், அடுத்த சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகத் தொடங்கிவிட்டன. இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது சச்சினின் ட்வீட்டை 38 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டிருந்தனர். சுமார் ஒரு லட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதனை விரும்பியிருந்தனர். 9 ஆயிரத்து 300 பேர் அதனை ரீ ட்வீட் செய்திருந்தனர்.
அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசுகையில் சச்சின் எங்கே இருந்தார்?
அர்ஜூன் டெண்டுல்கரின் ஐ.பி.எல். பிரவேசம் சச்சின் குடும்பத்திற்கு சிறப்பான தருணமாக அமைந்திருந்தது. சச்சினின் ஒட்டுமொத்த குடும்பமும் மைதானத்திற்கு வருகை தந்திருந்தது. அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசும் போது, அவரது சகோதரி சாரா டெண்டுல்கர் அவரை உற்சாகப்படுத்திய காட்சியை தொலைக்காட்சி நேரலையில் ரசிகர்களால் பார்க்க முடிந்தது.
ஆனால், சச்சின் டெண்டுல்கரை மட்டும் மைதானத்தில் எங்கும் காண முடியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் என்ற முறையில் அந்த அணி விளையாடும் அனைத்து ஆட்டங்களையும் டக்-அவுட்டில் அமர்ந்து பார்ப்பது அவரது வழக்கம். நேற்றும் கூட மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்த போது அவரை டக் அவுட்டில் பார்க்க முடிந்தது.

பட மூலாதாரம், BCCI/IPL
ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கின் போது அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசுகையில் சச்சின் டெண்டுல்கரை மைதானத்தை எங்கும் பார்க்க முடியவில்லை. இதுகுறித்து, போட்டியை வர்ணனை செய்து கொண்டிருந்த, சச்சினுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்து களம் கண்ட இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சில விவரங்களை அளித்தார்.
அர்ஜூன் டெண்டுல்கரின் ஐ.பி.எல். அறிமுகம் குறித்து இடைவேளையின் போது சச்சின் டெண்டுல்கரிடம் பேசியதாகவும், அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டார். அதேநேரத்தில், மைதானத்தில் எல்லைக்கோட்டிற்கு வெகு அருகில் வீரர்கள், உதவியாளர்கள் அமரக் கூடிய டக் அவுட் பகுதியில் சச்சின் அமர்ந்திருக்கவில்லை.
டக் அவுட்டில் தாம் அமர்ந்திருப்பதை பெரிய திரையில் நேரலை செய்தால் அர்ஜூன் டெண்டுல்கருக்கு பெரும் அழுத்தம் தருவதாக அமைந்துவிடும என்பதாலேயே டக்அவுட்டில் அமரவில்லை என்று சச்சின் கூறியதாக ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
ஆகவே, வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்து அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசியதை தொலைக்காட்சி வழியே நேரலையில் சச்சின் டெண்டுல்கர் கண்டு ரசித்ததாகவும், தன்னுடன் பேசிய பிறகு சச்சின் மீண்டும் அங்கே திரும்பிப் சென்றுவிட்டதாகவும் ஹர்பஜன் சிங் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












