You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனித உரிமை மீறல் விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை: சிறிசேன
மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் புதிய அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளபடி, மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்க முடியாது என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, நிராகரித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு போரின்போது நடைபெற்ற தீவிரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பணியில் உதவ வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கமுடியாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
முன்னதாக, அதற்கு அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.
தவறிழைத்த இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கப்போவதில்லை என்றும் இலங்கை அதிபர் கூறியிருக்கிறார்.
நீதி குறித்த தனது சொந்த கடப்பாடுகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நடவடிக்கைகள் மந்த கதியில் இருப்பது கவலையளிப்பதாக ஐ.நா மனித உரிமை ஆணையர் அலுவலகம் வெள்ளிக்கிழமையன்று கூறியிருந்தது.
காவலில் எடுக்கப்படும் மக்கள், தற்போதும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், மனித உரிமை பணியாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாகவும் தகவல்கள் கிடைப்பதாக அது மேலும் தெரிவித்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்