மூளை வளர பழங்கள் காரணமா?
நம் முன்னோர்கள் பழங்களை தேடி உண்டதால் அந்த செயல்கள் அவர்களின் மூளை பெரிதாக வளர உதவியிருக்கும் என ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Megan Petersdorf
இந்த கண்டுபிடிப்பு சமூக உறவுகள் தான் நமது அறிவு வளர காரணம் என்ற பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு கருத்துக்கு சவாலாக உள்ளது.
140க்கும் மேற்பட்ட குரங்குகள் மற்றும் மனிதக் குரங்கு வகையை சார்ந்த இனங்களின் உணவு நுகர்வு மற்றும் சமூக நடத்தையை நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.

பட மூலாதாரம், Megan Petersdorf
தங்களது உணவில், இலைகளை விட பழங்களை அதிகமாக உண்ட விலங்குகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அவற்றில் மூளை பெரிதாக இருப்பதாக அவர் கூறுகின்றனர்.
சமூகத்தில் இணைந்து இருப்பதற்கான தேவையை விட, எளிதாக அணுகமுடியாதபடி உள்ள பழங்களை தேடி அவற்றை உரித்து உண்பது போன்ற செயல்கள்தான் அவர்களின் மூளை வளர்வதற்கு முக்கியமாக இருந்திருக்க முடியும் என்று ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












