You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குச்சி ஐஸ் போல இட்லி: சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியது ஏன்?
இட்லி குறித்து சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் ஒன்று நடைபெற்று வருகிறது.
அது என்ன இட்லி குறித்த வார்த்தை போர் என நீங்கள் ஆச்சரியமடையலாம்.
மேலே உள்ள புகைப்படம்தான் அதற்கு காரணம்.
இந்த புகைப்படத்தில் குச்சி ஐஸ் போல காட்சியளிக்கும் இட்லி சாம்பாரில் முக்கப்பட்டுள்ளது.
இந்த படம் பெங்களூருவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த புதுவித யோசனையை பலர் பாராட்டினாலும் சிலர் இதுகுறித்து கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் சிஇஒ ஆனந்த் மகேந்திரா இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து இந்த புதுவித யோசனை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பலர் ஆதரவும் எதிப்பும் தெரிவித்திருந்தனர்.
இட்லி என்பது கைகளால் உண்ணப்படுவதுதான் வழக்கம் அதை இவ்வாறு எப்படி மாற்ற முடியும் என பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
பலர் இது தேவையில்லாத `புதுமை` என்று தெரிவித்திருந்தனர்.
பலர் பெங்களூரு எப்போதும் உணவில் புத்தாக்கம் செய்யப் பெயர்போனது என்றும் தெரிவித்திருந்தனர்.
பொதுவாக உணவு என்று வரும்போது அது பாரம்பரியம் தொடர்பானதாக பார்க்கப்படுவதால் அதுகுறித்த விவாதங்களும் தீவிரமானதாகவே அமைந்துவிடுகின்றன.
கடந்த ஆண்டு பிரிட்டனை சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் இட்லியை சுவாரஸ்யமற்ற உணவு என்று தெரிவித்ததால் பெருமளவில் கண்டனங்கள் எழுந்தன என்பது நினைவில் இருக்கலாம்.
பிற செய்திகள்:
- SRH vs CSK: சென்னையை அலறவிட்ட ஜேசன் ஹோல்டர், ஹெலிகாப்டர் ஷாட்டில் கரை சேர்த்த தோனி
- நரேந்திர மோதி அறிமுகப்படுத்தவுள்ள செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் என்றால் என்ன?
- உத்தர பிரதேசத்தில் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண் கருக்கலைப்பின்போது பலி
- டைனோசர்களின் 50 எலும்புகள் - புதிய பார்வை தரும் எச்சங்கள்
- 'சிவகுமாரின் சபதம்': விமர்சனம்
- பெண் அதிகாரிக்கு 'இரு விரல்' பரிசோதனை நடத்தியதா இந்திய விமானப்படை?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்