கொரோனா அச்சுறுத்தல்: தஞ்சை பெரிய கோயில் மூடப்பட்டது Corona Tamil nadu Update

கொரோனா அச்சுறுத்தல்: தஞ்சை பெரிய கோயில் மூடப்பட்டது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் மூடப்பட்டுவரும் நிலையில், தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் மூடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் மால்கள், திரையரங்குகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், புராதன சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களையும் மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோயில் தொல்லியல் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளதாலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடம் என்பதாலும் அந்தக் கோயிலை மார்ச் 31ஆம் தேதிவரை பக்தர்களின் வருகைக்கு தடை விதித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். 

Banner image reading 'more about coronavirus'
Banner

பெருவுடையார் ஆலயத்திற்கு நடந்த குடமுழுக்கிற்குப் பிறகு, அங்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில நாட்களாக கோவிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இன்று காலையில் கோயில் வழக்கம்போல திறக்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் வந்த நிலையில், பூஜைகளும் நடத்தப்பட்டன. ஆனால், காலை பத்து மணியளவில் கோவிலை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவிலில் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டு, கோவிலின் வாசல் மூடப்பட்டது.

கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டாலும், பூஜைகள் தொடர்ந்து நடக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பிற கோவில்கள் மூடப்பட்டவில்லை. அவற்றில் வழக்கம்போல வழிபாடுகள் நடந்துவருகின்றன.

137 புற நோயாளிகள்

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவுக்கு நேற்று (மார்ச் 17) 137 புற நோயாளிகள் வந்ததாக ட்வீட் பகிர்ந்துள்ளார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் பாஸ்கர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: