கொரோனா வைரஸ்: உயரும் பலி எண்ணிக்கை, ரத்து செய்யப்படும் விமானங்கள் - இந்தியாவின் நிலை என்ன? Latest Corona Updates

கொரோனா: உயரும் பலி எண்ணிக்கை, ரத்து செய்யப்படும் விமானங்கள் - இந்தியாவின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலன் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் கேரளாவை சேர்ந்த 8 பேருக்கும் ராஜஸ்தான் மற்றும் டெல்லியை சேர்ந்த தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலன் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இதற்கிடையே இன்று (மார்ச் 11) இத்தாலியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா வந்த 83 பயணிகளும் மானேசரில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் குறிப்பிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

இந்த 83 பயணிகளில், 74 பேர் இந்தியர்கள், 6 பேர் இத்தாலி நாட்டவர், எஞ்சிய மூவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இதற்கிடையே கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக கோலாலம்பூர், சிங்கப்பூர், தோஹா, ஹாங்காங் மற்றும் குவைத்திலிருந்து சென்னை வந்து செல்லும் 10 விமானங்கள் இன்றோடு மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக இரானில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில், 6 சுகாதாரத்துறை அதிகாரிகள் இரானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அங்கு கொரானோ வைரஸ் சோதனை மையங்களை நிறுவ உதவுவர் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 7-ஆம் தேதியன்று, இரானில் இருந்து 108 பேரிடம் எடுக்கப்பட்ட கொரானோ தொற்று சோதனை மாதிரிகள் இந்தியா வந்தது. இதில் கொரானோ தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் நேற்று இந்தியா அழைத்து வரப்பட்டனர்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தரம்சாலாவில் வியாழக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வீரரான புவனேஸ்வர் குமார் கூறுகையில், 'கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து மருத்துவர்கள் குழுவொன்று எங்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. இன்று அவர்களுடன் எங்களுக்கு ஒரு சந்திப்பு உள்ளது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவக்கூடாது என்று மருத்துவர்கள் கூறினால், நிச்சயம் அதை நாங்கள் பின்பற்றுவோம்' என்று கூறினார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: