கார்த்தி சிதம்பரம் பேட்டி: ‘’இந்திராணி முகர்ஜியை நான் சந்தித்ததே இல்லை’’

''இந்திராணி முகர்ஜியை நான் சந்தித்ததே இல்லை '' :கார்த்தி சிதம்பரம் பேட்டி

பட மூலாதாரம், Madhu Kapparath/Mint via Getty Images)

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் தலைவர் இந்திராணி முகர்ஜி, இயக்குனர் பீட்டர் முகர்ஜி ஆகியோரை தான் சந்தித்ததே இல்லை என்று ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், ''என் வாழ்க்கையில் பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோரை நான் பார்த்ததே இல்லை. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜரானபோதுதான் இந்திராணியை நான் பார்த்தேன்'' என்று அவர் கூறினார்.

கார்த்திக் சிதம்பரம்

பட மூலாதாரம், Getty Images

மேலும் அவர் கூறுகையில், ''இந்திராணி, பீட்டர் ஆகியோரின் நிறுவனத்துடன் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ யாரிடமும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை'' என்று குறிப்பிட்டார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

டெல்லி ஜந்தர்மந்தரில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தான் கலந்து கொள்வதாக கார்த்தி சிதம்பரம் மேலும் கூறினார்.

சென்னை விமானநிலையத்தில் இன்று காலையில் பேசிய கார்த்தி சிதம்பரம், காஷ்மீர் சர்ச்சையை திசைமாற்ற ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறினார்.

''இந்திராணி முகர்ஜியை நான் சந்தித்ததே இல்லை '' - கார்த்தி சிதம்பரம்

பட மூலாதாரம், HINDUSTAN TIMES/GETTY IMAGES

முன்னதாக ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகளால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. நடத்திய சோதனைகளில் இதற்கென வழங்கப்பட்ட பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான வவுச்சர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக 2018-ஆம் ஆண்டு மே மாதம் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகளால் ப சிதம்பரம் செய்யப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: