You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அபிநந்தனுக்கு முன்பே கார்கில் போரின்போது பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானி
அபிநந்தன் கைது செய்யப்பட்டது போன்ற சம்பவம் கார்கில் போரின் போதும் நடந்துள்ளதாகவும், அவர் விடுவிக்கப்பட்டதுபோல அபிநந்தனும் விடுவிக்கப்படுவார் என்று இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஏ. ஒய். டிப்னிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய அவர், "கார்கில் போரின் போதும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அபோதும்கூட விமானி நசிகேதா, விமானத்திலிருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. எதிரியின் நடவடிக்கையால் அவர் வெளியேறவில்லை. அவரது விமான என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் அவர் வெளியேற நேர்ந்தது. பாகிஸ்தான்வசம் பிடிப்பட்ட அவர், சிறிது காலம் அங்கு வைக்கப்பட்டப் பிறகு திரும்ப ஒப்படைக்கப்பட்டார். எனவே அதே முன்மாதிரி அடிப்படையில் தற்போது பாகிஸ்தான் பிடித்துவைத்துள்ள இந்திய விமானியும், சம்பவம் உண்மையாக இருக்குமானால், விடுவிக்கப்படுவார் என்றே நம்புகிறேன்," என்றார்.
பாகிஸ்தான் விமானப் படை பலம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிப்னிஸ், "சில தசாப்தங்கள் முன்புவரை அதாவது 1971வரை, பல அளவுகோல்களில் பாகிஸ்தான் படை இந்தியாவைவிட நவீனமாக இருந்தது. பாகிஸ்தானிடம் அமெரிக்க உபகரணங்கள் இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா அவர்களைவிட முன்னோக்கி சென்றுவிட்டது. இந்திய ராடார் உபகரணங்கள் நவீனமானது. ஆனால் அதே நேரம் மலைகள் நிறைந்த பகுதி அது. அது மாதிரியான இடங்களில் ராடர்கள் பிழையான தகவல்களை சொல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனை சரி செய்யும் வழிகளும் உள்ளன. ஆனால், அவை முழுமையானது அல்ல. அந்த சூழலுக்கன பிரத்யேக ராடர்கள் இப்போது வந்துவிட்டன. ஆனால் அதுவும் முழுமையாக சரியாக இருக்குமென்று கூற முடியாது. இப்போது இரு நாடுகளிடமும் எத்தனை ராடர்கள் உள்ளன என எனக்கு தெரியாது." என்றார்
பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் இந்தியா துரிதமாக செயல்பட்டு பதிலடி கொடுத்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட மிக் 21 விமானத்தை இந்தியா இழந்ததாகவும், அதன் விமானியை காணவில்லை என்றும், பாகிஸ்தான் அவர்கள் வசம் விமானி இருப்பதாக கூறுவதாகவும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தப்புக் கணக்குப் போடுவதால் ஏற்படும் ஆபத்து அதிகம் என்றார்.
அவர், "குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆயுதங்கள் உள்ள நாடுகளில், பதற்ற நிலை அதிகரித்தால், நிலைமை கையை மீறிப் போகும் நானோ, மோதியோ கூட அந்த நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, உட்கார்ந்து பேசுவதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார் இம்ரான்.
எனவே, இனிமேலாவது கொஞ்சம் நடைமுறை அறிவுடன், ஞானத்துடன் நடந்துகொள்வோம். நம்மிடம் இந்திய விமானிகள் உள்ளனர். ஆனால், இங்கிருந்து நாம் எங்கே செல்லப்போகிறோம் என்பதுதான் முக்கியமானது" என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்:
- பாகிஸ்தானில் வைரலாகப் பரவுகிறது வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தின் போலி புகைப்படங்கள்
- ‘போர் வேண்டாம்’: இணையத்தில் டிரெண்டாகும் #SayNoToWar ஹாஷ்டாக்
- LIVE: இந்திய விமானப்படை ஜெய்ஷ்- இ-முகமது முகாம் மீது தாக்குதல் நடத்தியது எப்படி?
- இந்திய தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர் சொல்வதென்ன? - BBC EXCLUSIVE
- இந்தியா பதிலடி தாக்குதல் நடத்திய பாலகோட் எங்கிருக்கிறது?
- இந்திய விமானப் படை தாக்குதல் குறித்து என்ன சொல்கின்றன பாகிஸ்தான் ஊடகங்கள்?
- இந்தியா விமான படை தாக்குதல்: கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன?
- பாலகோட் தாக்குதல்: வரவேற்கிறது புல்வாமாவில் இறந்த சுப்ரமணியன் குடும்பம்
- வித்தியாசமான பதிலடி வரப்போகிறது: இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்
- பாலகோட் விமான தாக்குதல்: பாகிஸ்தானிலிருந்து இந்திய விமானங்கள் எப்படி வெளியேறின?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்