You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்: வைரலாக பரவுகிறது வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தின் போலி புகைப்படங்கள் #BBCFactCheck
- எழுதியவர், உண்மை கண்டறியும் குழு
- பதவி, பிபிசி நியூஸ்
இந்திய விமானப்படை தாக்குதலுக்கு எதிர்வினையாக புதன்கிழமை இரண்டு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது.
ஒரு விமானம் பாகிஸ்தான் பகுதியில் வீழ்ந்ததாகவும், ஒரு விமானி தங்களது கட்டுப்பாட்டில் உள்ளார் என்றும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் கூறியுள்ளார்.
நேற்று பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் இந்தியா துரிதமாக செயல்பட்டு பதிலடி கொடுத்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது பிப்ரவரி 14ஆம் தேதி ஒரு ஆயுதக் குழு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இதில் 40 படையினர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்தே இரு தரப்புக்கும் இடையில் பதற்றம் அதிகரித்தது.
பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியதை அடுத்து #Pakistaniarmyzindabad, #Pakistanairforceourpride and #Pakistanstrikesback உள்ளிட்ட ஹாஷ்டாகுகள் பாகிஸ்தானில் டிரெண்ட் ஆகின.
விமான தாக்குதல் நடந்ததாக கூறப்படும் செய்தியை பாகிஸ்தான் தொலைக்காட்சி ஊடகங்கள், இணையதளங்கள் மிக விரிவாக வெளியிட்டன. நொடிக்கு நொடி அது குறித்த தகவல்களையும் புதுப்பித்துக் கொண்டே இருந்தன.
இந்திய விமானங்கள் அழிக்கப்பட்டதாக பகிரப்படம் பல புகைப்படங்கள், காணொளிகளும் பகிரப்பட்டு வருகின்றன.
இது குறித்து பிபிசி மேற்கொண்ட ஆய்வில் அந்த புகைப்படங்களில் பெரும்பாலானவை போலியானவை என்று தெரியவந்துள்ளது.
காயமடைந்த இந்திய விமானியின் காணொளி
இந்திய விமானி ஒருவர் தரையில் கிடப்பது போல காட்டும் ஒரு காணொளி காட்சியை சில பாகிஸ்தானி டிவிட்டர் பயனர்கள் பகிர்ந்தனர். அந்த காணொளியில், அவரின் முகத்தில் ரத்தமும், காயமும் இருந்தன. அவர் உயிருடன் இருந்தார்.
பாகிஸ்தான் படைகள் இந்திய விமானியை கைது செய்ததற்கு சாட்சியாக அந்த காணொளி காட்சி பகிரப்பட்டது.
அவர் இந்திய விமானப்படை விமானிதான். ஆனால், அந்த பகுதி பாகிஸ்தான் பகுதி அல்ல. படத்தில் இருப்பவர் விமானப்படை கமாண்டர் விஜய் ஷேக்லே. பிப்ரவரி 19, 2009 அன்று பெங்களூருவில் அவரின் சூர்யகிரண் விமானம் விபத்திற்குள்ளானதில் அவர் காயம் அடைந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது.
அவரை காப்பாற்ற உள்ளூர் இளைஞர் ஒருவர் விரைகிறார். அவரது கரங்களைபற்றி ஆசுவாசப்படுத்துகிறார். யாரை தொடர்பு கொள்ள வேண்டுமென்று வினவுகிறார். அந்த விமானி அந்த பதிலளிக்கிறார். தனது உடலில் வேறேதும் காயங்கள் இருக்கிறதா என பார்க்க சொல்கிறார்.
குவிண்ட் இணையதளம் இது குறித்து விரிவான கட்டுரையை வெளியிட்டு இருக்கிறது. அந்த விமானி மற்றும் அவருக்கு உதவிய இளைஞர் குறித்து விவரித்தது அந்த செய்தி.
முதல் புகைப்படம்
விபத்துக்குள்ளான இந்திய விமானப் படையின் புகைப்படம் பாகிஸ்தானி சமூக ஊடகங்களிலும், பாகிஸ்தான் செய்தி ஊடகங்களிலும் நூற்றுக்கணக்கான முறை பகிரப்பட்டது.
விமானத்தின் வால் பகுதி அப்படியே உள்ளபோது, அந்த விமானத்தின் முகப்பு பகுதி முற்றிலும் சேதம் அடைந்திருந்தது.
அந்த புகைப்படத்தை பகிர்ந்து பாகிஸ்தான் இந்தியாவை பழி தீர்த்ததிற்கு இந்த புகைப்படம்தான் சாட்சி என டிவிட்டரில் பதிவுகள் வெளியாயின.
அந்த விமானம் நிச்சயம் இந்திய விமானப்படை விமானம்தான். ஆனால் அதற்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2015ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி இந்திய அதி நவீன ஜெட் பயிற்சி விமானம் ஒடிசா மாநில மயூர்பஞ்ச் மாநிலத்தில் விபத்துக்குள்ளானது. அதன் புகைப்படம்தான் இது.
இரண்டாவது புகைப்படம்
இந்திய விமானப் படை விமானம் கட்டடத்தை மோதியது போல ஒரு புகைப்படமும் பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
ஆனால், இந்த புகைப்படத்திற்கும் பாகிஸ்தானிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி ராஜஸ்தான் மாநில ஜோத்பூரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இந்திய பாதுகாப்பு படையின் மிக் 27 ரக விமானம் மோதியது. அதன் புகைப்படம்தான் இது.
(நீங்கள் சந்தேகிக்கதகுந்த செய்திகளையோ, புகைப்படம் அல்லது காணொளியையோ கண்டால், பிபிசிக்கு இந்த எண்ணில் +91 9811520111 வாட்ஸ் ஆப் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பு https://api.whatsapp.com/send?phone=919811520111&text=&source=&data=மூலம் தெரிவியுங்கள்.)
தொடர்புடைய செய்திகள்:
- LIVE: இந்திய விமானப்படை ஜெய்ஷ்- இ-முகமது முகாம் மீது தாக்குதல் நடத்தியது எப்படி?
- ''இந்தியாவை அழிக்க விடமாட்டேன்'' - பாலகோட் தாக்குதலுக்குப்பின் பிரதமர் மோதி பேச்சு
- இந்திய தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர் சொல்வதென்ன? - BBC EXCLUSIVE
- பாலகோட் விமானத் தாக்குதல்: உண்மையை மறைக்க முயல்கிறதா பாகிஸ்தான்?
- இந்தியா பதிலடி தாக்குதல் நடத்திய பாலகோட் எங்கிருக்கிறது?
- இந்திய விமானப் படை தாக்குதல் குறித்து என்ன சொல்கின்றன பாகிஸ்தான் ஊடகங்கள்?
- இந்தியா விமான படை தாக்குதல்: கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன?
- பாலகோட் தாக்குதல்: வரவேற்கிறது புல்வாமாவில் இறந்த சுப்ரமணியன் குடும்பம்
- வித்தியாசமான பதிலடி வரப்போகிறது: இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்
- பாலகோட் விமான தாக்குதல்: பாகிஸ்தானிலிருந்து இந்திய விமானங்கள் எப்படி வெளியேறின?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்