உறிஞ்சப்பட வேண்டுமா நிலத்தடி நீர்? - போராட்டமும், சமூக ஊடக கருத்தும்

உறிஞ்சப்பட வேண்டுமா நிலத்தடி நீர்? - போராட்டமும், சமூக ஊடக கருத்தும்

பட மூலாதாரம், Getty Images

நிலத்தடி நீரை உறிஞ்சக்கூடாது என்ற நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தண்ணீர் லாரி உரிமையாளர்கள், கேன் நீர் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக, "குடிநீர்த் தேவைக்காக நீக்குப்போக்காக இருக்கவேண்டுமா?, நிலத்தடிநீர் பாதுகாப்பில் கறாராக இருப்பது அவசியமா?" என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.

"பணம் இருந்தால் போதும் என்று நினைத்து இயற்கை எனும் பொன்முட்டை இடும் வாத்தை கொன்ற கதையாக கொள்ளையடிக்கும் கும்பலுக்கு புரிய வைக்க இது போன்ற நெருக்கடி வரத்தான் வேண்டும்." என்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருக்கிறார் ராஜேந்திரன் உத்திரபதி.

உறிஞ்சப்பட வேண்டுமா நிலத்தடி நீர்? - போராட்டமும், சமூக ஊடக கருத்தும்

பட மூலாதாரம், Getty Images

மனோகரன், "நிலத்தடி நீரோ, ஆற்று நீரோ. மக்களுக்கு தண்ணீர் தடையில்லாமல் கொடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமை. அரசாங்கமும் சப்ளை செய்யாது, ஆற்றிலும் தண்ணீர் கிடையாது, ஒரு குளம் கூட பாராமரிப்பது கிடையாது. சாராயம் விற்பதிலும், கமிஷன் வாங்குவதிலும் தான் இந்த அரசு குறியாக இருக்கிறது." என்கிறார்.

"அனாவசயமான சாராயத்தை அரசு எடுத்து நடத்தும் போது மக்களின் அத்யாவசிய தேவையான தண்ணீர் சுத்திகரிப்பையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசிடம் லிட்டர் இரண்டு ருபாய்க்கு தண்ணிர் வாங்கி செலவு மூன்று ரூபாய் பாக்கி லிட்டருக்கு பதினைந்து ருபாய் லாபம் பார்க்கும் மினரல் வாட்டர் கம்பெனிகளையும் அரசே எடுத்து நடத்தினால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்" என்பது தமிழன் முகமது சித்திக்கின் கருத்து.

அனிஸ் அகமது, "இன்றைய என்னுடைய தேவை பூர்த்தியானால் போதும் என்ற நினைப்பின் ஒரு பகுதியே நிலத்தடி நீர் பயன்பாடு. வேறு வழியில்லாமல் மக்கள் இந்த இழி நிலையை தேர்ந்தெடுக்கத் தள்ளிய பெருமை ஆட்சியாளர்களை சாரும். மழை நீரை சேகரித்து வைப்பதில் இன்னும் கவனம் செலுத்தாமல் இருப்பது சிறிய உதாரணம்." என்கிறார்.

வாதம் விவாதம்

அரபு நாட்டில் உள்ளது போன்று காற்றில் இருந்து தண்ணீரை பிரித்தெடுக்கும் இயந்திரம் வரவேண்டும் என்கிறார் வெங்கடகிருஷ்ணன்.

உறிஞ்சப்பட வேண்டுமா நிலத்தடி நீர்? - போராட்டமும், சமூக ஊடக கருத்தும்
X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

மணிகண்டன், "இவர்கள் நிலத்தடிநீர் மாஃபியாக்கள்.இவர்களுக்கு கருணை காட்டினால் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது. ரியல் எஸ்டேட் மாஃபியாக்களால் நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் தான் கிடைக்கவில்லை, நிலத்தடிநீர் விவகாரத்திலாவது அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்." என்கிறார்.

உறிஞ்சப்பட வேண்டுமா நிலத்தடி நீர்? - போராட்டமும், சமூக ஊடக கருத்தும்
X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: