சமூக ஊடகங்களில் கமல்: இளம் வாக்காளர்கள்தான் இலக்கா?

பட மூலாதாரம், STRDEL
அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து, தொடர்ந்து இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் கமல். அவர் மட்டுமல்ல அவர் ஆரம்பித்த #MakkalNeedhiMaiam கட்சியும் ட்ரெண்டிங்கில் உள்ளது. கமல் தொடர்ந்து பதிவிட்டு வரும் வித்தியாசமான வீடியோக்களும், ட்வீட்டுகளும்தான் இதற்கு காரணம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
கமலின் அரசியல் பிரவேசம் குறித்த சலசலப்பு, சமூக ஊடகங்களில் அடங்குவதாக இல்லை. பெரும்பாலும் இளம் தலைமுறையினரே ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் அதிகமாக உள்ளனர். கமல் அரசியலில் நுழைந்தது ஒருபுறமிருக்க, சமூக ஊடகங்களில் இவருக்கு இருக்கும் ஆதரவும், எதிர்பும் வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறி.
இது குறித்து சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு பேசியது பிபிசி தமிழ்.
சமூக ஊடகங்களில் கமலும், ரஜினியும் ஒரு பேசுபொருள்தான்
கமலின் அரசியல் பிரவேசத்தை சமூக வலைதளங்கள் எப்படி பார்க்கிறது என்பது குறித்து பிபிசி தமிழிடம் விவரித்தார் எழுத்தாளர் அராத்து.
சமூக ஊடகங்கள் என்பது எப்பவுமே தீவிரமாக இயங்குவது இல்லை என்றும் இன்றைக்கு யார் கிடைப்பாரகள், யாரை வைத்து பிழைப்பு ஓட்டலாம் என்று தான் இருக்கும் எனக் கூறுகிறார் அராத்து.

பட மூலாதாரம், FACEBOOK
ஃபேஸ்புக், ட்விட்டரில் கமலும், ரஜினியும் ஒரு பேசுபொருள்தான் என்று குறிப்பிட்ட அவர், சோஷியல் மீடியாவை வைத்து பெரிய அறுவடை எல்லாம் செய்துவிட முடியாது என்கிறார்.
"சமூக வலைதளங்களுக்கு என ஒரு முகம் உள்ளது. இங்கு பெரும்பாலானோர் முற்போக்காக காட்டிக் கொள்ள முயல்பவர்கள்தான். இதை வைத்து கமலால் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால், கமலை இங்கு பாராட்டுபவர்கள் தேர்தலில் அவருக்கு ஓட்டு போடாமல் இருக்கலாம். திட்டுபவர்கள் ஓட்டு போடலாம்" என்றும் எழுத்தாளர் அராத்து குறிப்பிட்டார்.
"அரசியலுக்கு வந்துவிட்டால் களப்பணிதான் ஆற்ற வேண்டும். வீட்டில் அமர்ந்து வீடியோ பதிவேற்றினாலோ அல்லது ட்வீட் செய்தாலோ சோஷியல் மீடியாவை பரபரப்பாக வைத்திருக்க முடியுமே தவிர மக்களிடம் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்கிறார் அவர்.
ஃபேஸ்புக், ட்விட்டரில் இருப்பவர்களை மகிழ்விக்கவே கமல் இவ்வாறு பல்வேறு வீடியோக்களையும் ட்வீட்களையும் பதிவிடுகிறார் என்றும் அவர் கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
முதல் தலைமுறை வாக்காளர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
இந்த சமூக ஊடக பிரச்சார அரசியல், அதனை பெரிதும் பயன்படுத்தும் முதல் தலைமுறை வாக்காளர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு, "தற்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு வாசிப்பு பழக்கம் கிடையாது. சமூக நீதியின் அர்த்தமோ அரசியல் தெளிவோ, இட ஒதுக்கீடு என்றால் என்ன என்பதோ அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால் கமலை நம்பி சிலர் வாக்களிக்க வாய்ப்புள்ளது" என அராத்து தெரிவித்தார்.
இதுகுறித்து ஊடகவியாளர் உமாமகேஷ்வரன் பிபிசி தமிழிடம் பேசியபோது, சமூக ஊடகங்களில் கமல் இவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பது நிச்சயம் ஒருவகையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்.

பட மூலாதாரம், FACEBOOK
கமலை திரும்பிப் பார்த்த மக்கள்
"களத்தில் அனைவரும் வேலை செய்கிறார்கள். ஆனால், அதனை யார் விளம்பரப்படுத்துகிறார்களோ, அவர்கள்தான் வேலை செய்பவர்கள் என்ற அதீத நம்பிக்கை இந்தத் தலைமுறையினருக்கு உண்டு. வட்ட செயலாளர், ஒன்றிய செயலாளரின் பணி என்ன என்று கேட்டால் இவர்களுக்கு தெரியாது. ஆனால், ஏதாவது சின்ன வேலை செய்துவிட்டு அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டால், அவர் தீவிரமாக வேலை செய்பவர் என்ற இமேஜ் வந்துவிடும். ஆதலால், கமலின் சோஷியல் மீடியா பிரவேசம் நிச்சயம் முதல் தலைமுறையினர் வாக்காளர்களிடம் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார் உமாமகேஷ்வரன்.

பட மூலாதாரம், Getty Images
இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரிதாக ட்விட்டரில் செயல்படாமல் இருந்த கமல் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து ஆக்டிவாக இருந்ததை குறிப்பிடுகிறார்.
ஒரு காலகட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளுமே சோஷியல் மீடியாவில் செயல்பட தொடங்கிய நிலையில், கமலின் தொனி மக்களை ஈர்த்ததாகவும், தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விமர்சித்த கமலை மக்கள் திரும்பி பார்க்க ஆரம்பித்ததாகவும் குறிப்பிடுகிறார்.
கமல் சுமார் ஒரு வருடமாகவே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த காரணத்தினால்தான், அவர் இப்போது வெளியிடும் வீடியோக்கள் நல்ல வரவேற்பை பெறுகிறதாகவும் உமா தெரிவித்தார்.
இந்நிலையில், சோஷியல் மீடியாவில் இளம் தலைமுறையினர் சிலர், இவரை புகழ்ந்து கொண்டிருந்தாலும், வாளின் மறுமுனை கூர்மையாக உள்ளது. அவர் களத்துக்கு வராமல் ட்விட்டர் அரசியல் மட்டுமே செய்கிறார் என்கின்றனர் ஒரு பகுதி மக்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
தனது இருப்பை உறுதிப்படுத்தும் கமல்
ட்விட்டரில் சுறுசுறுப்பாக இருக்கும் கமல், தானும் களத்தில் இருக்கிறேன் என அனைவருக்கும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்ட உமா, இதற்கு நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் வருவது அவர் இருத்தலை உறுதிப்படுத்தி வருகிறது என்றார்.
"கமல் களப்பணி ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், அவர் ஒரு சினிமா நட்சத்திரம். ஒவ்வொரு முறை வெளியே வரும்போதும் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், அவர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் அமர்ந்து வெளியிடும் வீடியோக்களால், மக்களிடம் அவரால் நேரடியாக இணைந்திருக்க முடியும்" என்றும் உமாமகேஷ்வரன் தெரிவித்தார்.
இதுகுறித்து எழுத்தாளர் சரவண கார்த்திகேயனிடம் பேசியபோது, சோஷியல் மீடியாவில் கமல் தீவிரமாக செயல்படுவது, அவர் படித்த இளைஞர்களை குறிவைப்பதாகவே தாம் பார்ப்பதாக கூறுகிறார். ஆனால் அவர் பதிவிடும் தமிழ் புரியவில்லை என்பதுதான் பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டு என்கிறார் அவர்.

பட மூலாதாரம், FACEBOOK
அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதுதான் கமலின் நோக்கம்
"சமூக வலைதளங்களில் தீவிரமாக ஈடுபடவில்லை என்றாலும், கமல் ரசிகர்கள் அவருக்குதான் வாக்களிப்பார்கள்" எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல, கமல் இளம் தலைமுறை வாக்காளர்களை மட்டும்தான் குறி வைப்பதாக கருத முடியாது என்று குறிப்பிட்ட சரவண கார்த்திகேயன், பத்திரிக்கையில் தொடர் எழுதி வெகுஜன மக்களையும் அவர் சென்றடைந்ததாக கூறுகிறார்.
தென்னிந்திய ஊடகங்கள் மட்டும் அல்லாது வடஇந்திய ஊடகங்களுக்கும் தொடர்ந்து கமல் நேர்காணல் அளித்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆகவே, அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதுதான் கமலின் நோக்கம் என்கிறார் சரவண கார்த்திகேயன்.
எதிராளியை பற்றி கவலைப்படாமல் இருக்கும் யுக்தியை அவர் கையாளுவதாகவும், ஆனால் இவையெல்லாம் வாக்குகளாக மாறி தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் சரவண கார்த்திகேயன் தெரிவித்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












