You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காவிரி தீர்ப்பு: தண்ணீர் பிரச்சனையின் முடிவா? தொடக்கமா?
காவிரி நதி நீர் விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய சிறப்பு அமர்வு தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
'காவிரி நீர் பங்கீட்டில் நீடித்த சர்ச்சை இதன்மூலம் முடிவுக்கு வருமா? அல்லது தண்ணீருக்கான தமிழ்நாட்டின் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்குமா?' என்று பிபிசி தமிழின் 'வாதம் விவாதம்' பகுதியில் நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்களின் பதிலைத் தொகுத்து வழங்குகிறோம்.
"தண்ணீர் கண்டிப்பாக சொன்ன அளவு வராது. இனி அரசியலும் செய்யமுடியாது. சகோதரக் கலவரத்தையும் உருவாக்கமுடியாது அரசியல்வாதிகள் புதிய பிரச்சனையை தேடுவார்கள்," என்று கூறியுள்ளார் பாஸ்கர் எனும் நேயர்.
இப்போது தமிழகத்துக்கான நீரின் அளவை குறைத்திருப்பதால், பிரச்சனை தீராது என்று கூறியுள்ளார் தமிழ் இராசேந்திரன்.
"ஒரு பக்கம் தண்ணீர் கொடுக்குறாங்க. இல்லை இன்னொரு பக்கம் வயல் வெளிகளில் இருக்கிற தண்ணீரை மீத்தேன் மூலம் உறிஞ்சு எடுக்குறாங்க எங்களுக்கு புரியல. தமிழ்நாட்டில் யாரும் வசிக்க கூடாதுன்னு நினைக்கிறாங்களா இப்படி ஒரு மாநிலம் இல்லாம போக இந்த ஏற்பாடா. உண்மையில் இது மறைமுகமான ஒரு சதி என்றே தோன்றுகிறது," என்கிறார் சந்திரா எனும் நேயர்.
"முதலில் இத்தீர்பு உடனடியாக அமலுக்கு வருமா?" என்று எழுப்புகிறார் ரமேஷ் நாராயண்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்