You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள் - அர்விந்த் சுவாமி
பத்மாவத் பட விவகாரத்தால் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் நடிகர் அர்விந்த் சாமி ட்விட்டரில் தனது கருத்தை எழுதியுள்ளார்.
''சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வாருங்கள். ஒன்று, பொதுமக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குங்கள் அது முடியவில்லையெனில் அது உங்களது நிர்வாகத் தோல்வியை காட்டுகிறதேயன்றி வேறொன்றுமில்லை'' - என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
அவரது இந்த ட்வீட்டுக்கு பலர் அவரது பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
''குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்வது?'' என ஜெயபாலா அர்விந்த் சுவாமி ட்வீட்டுக்கான பதிலில் கேள்வி எழுப்பியுள்ளார்.
''வன்முறை நடக்கும் இடங்களில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்தவரே குடியரசுத் தலைவராக இருந்தால் என்ன பயன் ? '' என கேட்டுள்ளார் யோகேஷ் சி பீரனா.
''எனது குழந்தைப் பருவத்தில் இருந்து இந்தியா ஒரு வளரும் நாடு என கூறிவருகிறேன். சாதி மற்றும் மதம் சார்ந்த அரசியல் அப்புறப்படுத்தப்படா விட்டால் நமது சந்ததியினரும் இந்தியா ஒரு வளரும் நாடு என்று மட்டுமே கூறிக் கொண்டிருப்பார்கள் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்'' என்றார் ஹர்ஷன்.
ராஜ்ரெட்டி தனது கருத்தில் '' சரி, ஜனாதிபதி ஆட்சி வந்தால் மட்டும் நிலைமை கட்டுக்குள் வந்துவிடுமா? நடைமுறை பிரச்சனை என்னவெனில் இந்திய மாநிலங்களில் காவல்துறையில் போதுமான ஆட்கள் இல்லை. மக்கள் மற்றும் காவல் துறையினரிடையேயான விகிதம் பொருந்தவில்லை'' என குறிப்பிட்டுள்ளார்.
''உண்மையான கதை தெரியாமல் எதற்காக படம் இயக்குகிறீர்கள். உங்களுக்கு கற்பனைத்திறன் இல்லையெனில் மக்களின் நம்பிக்கையை தொடாதீர்கள். எப்படியிருந்தாலும் வன்முறை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதுபோலவே வன்முறையைத் தூண்டுவதும் பொறுத்துக் கொள்ள இயலாது'' என தனது கருத்தை பதிவிட்டுள்ளார் எம். பிரபாகரன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்