உ.பி., ரயில் விபத்து; 21 பேர் பலி, 85 பேர் காயம்

பட மூலாதாரம், AMIT SAINI
உத்தர பிரதேசம் மாநிலம் முஸாஃபர்நகரில் உள்ள கத்தோலி அருகே கலிங்க-உத்கல் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 85 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பிபிசியிடம் பேசிய முஸாஃபர்நகர் மாவட்ட நீதிபதி ஜி.எஸ் பிரியதர்ஷி, ''என்னை பொறுத்தவரை இந்த விபத்தில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 80 லிருந்து 85 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.'' என்று கூறினார்.

பட மூலாதாரம், AMIT SAINI
ரயிலில் பயணித்த பிற பயணிகள் சுமார் 2000 பேர் பேருந்துகள் மூலம் அனுப்பப்பட்டு வருவதாகவும் நீதிபதி ஜி.எஸ் பிரியதர்ஷி மேலும் தெரிவித்தார்.
நேற்று (சனிக்கிழமை) மாலை சுமார் 5.50 மணியளவில் கத்தோலி அருகே கலிங்க-உத்கல் விரைவு ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன.

பட மூலாதாரம், SAMIRATMAJ MISHRA
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முடிந்துவிட்டதாகவும், சீரமைப்பு பணிகள் தொடங்கிவிட்டதாகவும் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சமூக ஊடகமான ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பூரியிலிருந்து ஹரித்துவாரை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த போது, கத்தோலி என்ற இடத்தில் ரயில்பெட்டிகள் தடம் புரண்டன.

பட மூலாதாரம், SAMIRATMAJ MISHRA
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ரயில் பெட்டிகள் தடம்புரண்ட சம்பவத்தை கேள்விப்பட்டு மிகவும் வேதனை அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 3.5 லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கடுமையான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- அ.தி.மு.க. அணிகள் இணைப்பு எப்போது?
- சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமான பேச்சு; கடும் மன உளைச்சலில் நடிகர் அஜித்
- நள்ளிரவில் மாறுவேடத்தில் கிரண் பேடி அதிரடி!
- 75 வயது மணமகன் 70 வயது மணமகள்: ஒரு விநோதத் திருமணம்
- டிரம்பின் வெற்றிக்கு காரணமாக இருந்தவரின் பதவி பறிப்பு
- புதினின் சட்டையில்லாப் புகைப்படங்கள் தூண்டிய ஆர்வம்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












