காசெம் சுலேமானீ மரணம்: அமெரிக்க விமானத்தளங்கள் மீது தாக்குதல் - டிரம்ப், இரான் தரப்பு கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இராக்கில் அமெரிக்க விமானத்தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட உலகத்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்கள் குறித்து டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''எல்லாம் நன்றாக உள்ளது. இராக்கில் இரண்டு ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து தற்போது ஆய்வு நடந்து வருகிறது. உலகில் எந்த பகுதியிலும் இதுவரை உள்ள மிக வலிமையான மற்றும் மிகவும் நவீனமான ராணுவம் நம்மிடம் உள்ளது. இந்த சம்பவம் குறித்து நாளை ஓர் அறிக்கை வெளியிடுவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இரானின் வெளியுறவுதுறை அமைச்சர் ஜாவேத் ஜாரிஃப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''பிரச்சனையை மேலும் நீட்டிக்கவோ அல்லது போர் நடத்தவோ இரான் கோரவில்லை. ஆனால் எங்களின் மீதான வலிய தாக்குதலை எதிர்த்து நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.
''எங்கள் நாட்டுமக்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது கோழைத்தனமான ஆயுத தாக்குதல் நடத்தப்பட்ட தளத்தின் மீது ஐ.நா. அமைப்பின் சாசன விதிகளின் 51-ஆம் பிரிவின்படி, எங்களின் சுயபாதுகாப்புக்காக சரியான அளவில் நடவடிக்கைகளை எடுத்து அதனை நிறைவேற்றினோம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
2020ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலின் ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிக வாய்ப்புள்ள ஜோ பிடன் இந்த தாக்குதல்கள் குறித்து வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''இந்த தாக்குதல்கள் குறித்து மேலும் நாம் அறிந்து கொள்வதற்கு முன்புவரை இது குறித்து நான் கருத்து தெரிவிக்கப்போவதில்லை. அமெரிக்க துருப்புகள் மற்றும் அங்கு இருக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு குறித்து எங்கள் பிரார்த்தனைகள் தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
அமெரிக்கா - இரான் இடையேயான பிரச்சனையை மேலும் நீட்டிக்கும் எண்ணம் இரானுக்கு இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த ட்வீட் செய்தி அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இராக்கில் உள்ள அல்-அசாத் மற்றும் இர்பிலில் குறைந்தது தங்களின் இரண்டு நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் அமைப்பு முன்னதாக குறிப்பிட்டுள்ளது.
'இராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் குறித்து எங்களுக்கு தெரியும். இது குறித்த தகவல்கள் அதிபர் டிரம்புக்கு விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வரும் அதிபர், நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்'' என்று வெள்ளை மாளிகையின் பெண் செய்தி தொடர்பாளரான ஸ்டாபானி கிரிஷம் ஓர் அறிக்கையில் இந்த தாக்குதல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- அமெரிக்க விமானத்தளங்கள் மீது இரான் தாக்குதல் - ‘சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடி இது’
- பால்கனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை குளிரில் உறைந்து மரணம்
- "சூர்யா அண்ணா கண் கலங்கியதே எனக்கு தெரியாது" - தன் குடும்ப சூழலை விவரிக்கும் காயத்ரி
- ஜே.என்.யு. போராட்டத்தில் தீபிகா படுகோன்: பாதிக்கப்பட்ட மாணவர்களோடு நின்றார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












