55 லட்சம் ரசிகர்களை கொண்ட இந்த பூனையை இனி பார்க்க முடியாது

லில் பாப் பூனை

பட மூலாதாரம், LILBUB.COM

படக்குறிப்பு, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் லில் பாப் பூனையை 55 லட்சம் பேருக்கு மேலானோர் பின்தொடர்ந்து வந்தனர்.

இணையதளத்தில் மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை இறந்தது.

சமூக வலை தளத்தில் இந்தப் பூனையை பின்தொடரும் பல மில்லியன் பேருக்கு, இதன் இறப்பு செய்தியை இந்தப் பூனையின் சொந்தகாரர் மைக் பிரிடாவ்ஸ்கி திங்கள்கிழமை அறிவித்தார்.

குமிழ் வடிவான கண்கள், எப்போதும் முன்னே நீட்டி இருக்கும் நாக்கு என வழக்கத்திற்கு மாறான தோற்றத்தை கொண்டிருந்ததால் லில் பாப் பூனை மிகவும் பிரபலமானது.

காட்டு பூனைக்குட்டியாக மீட்கப்பட்ட இந்த லில் பாப், வளர்ச்சிக்குறைவு நோய் (குள்ளத்தன்மை) உள்பட பல உடல்நல பிரச்சனைகளோடு பிறந்திருந்தது.

Instagram பதிவை கடந்து செல்ல, 1
Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

Instagram பதிவின் முடிவு, 1

லில் பாப் பூனை வாழ்ந்தபோது, விலங்குகளுக்கு சேவை செய்வதற்கு ஏழு லட்சத்திற்கு அதிகமான டாலர் நிதி திரட்டுவதற்கு உதவியது என்று மைக் பிரிடாவ்ஸ்கி கூறினார்.

உலக விலங்குகளின் நலத்திலும், உலக நாடுகளிலுள்ள மில்லியன்கணக்கான மக்களிடமும் லில் பாப் பூனை பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவு குறிப்பிடுகிறது,

தனித்தன்மையான தோற்றத்தால் ஆன்லைனில் லில் பாப் பிரபலமடைந்தது, லில் பாப்-பின் வளர்ச்சிக்குறைவு நோயால், வாழ்க்கை முழுவதும் பூனைக்குட்டியை போலவே வாழ்ந்து வந்தது.

பூனையின் சொந்தக்காரர் பிரிடாஸ்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பூனையின் சொந்தக்காரர் பிரிடாஸ்கி

இயற்கைக்கு அப்பாற்பட்டு அதிகமான கை அல்லது கால் விரல்கள் கொண்டதாக இந்த பூனை இருந்தது. ஒவ்வொரு பாதத்திலும், ஒரு விரல் கூடுதலாகவும், சரியான வளர்ச்சியுறாத தாடையையும், பற்கள் இல்லாததால் நாக்கு வெளியே நீட்டி கொண்டு இந்த பூனை இருந்தது.

இந்தியானா மாநிலத்தில் நாற்காலி கூடாரம் ஒன்றில் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டிருந்த பூனைக்குட்டிகளில் இருந்து லில் பாப்-யை பிரிடாஸ்கி எடுத்து வளர்த்தார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில் "இயற்கையின் மகிழ்ச்சியான விபத்து" என்று இந்த பூனையை பற்றி குறிப்பிட்டு, பல்வேறு உடல்நல சிக்கல்கள் இருந்தாலும், இந்த பூனை மகிழ்ச்சியாக, சுகாதாரமாக வாழ்ந்ததாக தெரிவித்தார்.

2011ம் ஆண்டு "டம்லர்" வலைப்பூவை உருவாக்கிய பிரிடாஸ்கி, இந்தப் பூனையின் புகைப்படங்களை அதில் பகிர்ந்தார். டெட்டிட் இணையதளத்தின் முதல் பக்கத்தில் இடம்பெறும் அளவுக்கு இந்தப் பூனை விவாதங்களை ஏற்படுத்தியது.

Instagram பதிவை கடந்து செல்ல, 2
Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

Instagram பதிவின் முடிவு, 2

அதிக கவனம் பெற்றதால் இந்தப் பூனை பற்றி அதிக கட்டுரைகள் எழுதப்பட்டன. அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்புகளும் விடுக்கப்பட்டன.

பத்திர ஒப்பந்தங்களையும், வணிக ஒப்பந்தங்களையும் பெற்ற இந்த பூனை, யு டியூப் நிகழ்ச்சிகள் மற்றும் ஆவணப்பட தொடர்களையும் உருவாக்க காரணமாகியது.

இதன் நட்சத்திர பிரபலத்தை கொண்டு, பிரிடாஸ்கி அமெரிக்க விலங்கு வதை தடுப்பு நிறுவனம் மூலம் ஊனமுற்ற பிற பூனைகளுக்கு உதவுவது உள்பட தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டினார்.

இறப்புக்கு முன்னர் இந்தப் பூனை எலும்பு நோய் தொற்றால் துன்பப்பட்டு வந்தது. இதன் உடல் நலம் பற்றிய தகவல்களை 24 லட்சம் பேர் பின்தொடர்ந்த இதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரிடாஸ்கி பகிர்ந்து வந்தார்.

ஃபேஸ்புக்கில் இந்தப் பூனையை 30 லட்சம் பேருக்கு மேலானோர் பின்தொடர்ந்தனர்.

Presentational grey line

மேட்டுப்பாளையம் விபத்து: 16 உடல்கள் எரியூட்டப்பட்டன - விரிவான தகவல்கள்

இடிந்த சுற்றுச்சுவர்

கோவை மேட்டுப்பாளையத்தில் நேற்று (திங்கள்கிழமை) ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அருகிலுள்ள வீடுகளின் மீது விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த 17 பேரின் உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், 16 உடல்கள் மின் மயானத்தில் எரிக்கப்பட்டன.

இறந்தவர்களில் ஒருவரின் உடலை உறவினர் ஒருவர் கையெழுத்திட்டு பெற்ற நிலையில், மற்ற உடல்களை இரவு 7 மணி அளவில் காவல்துறையினர் சாந்திவனம் என்ற பகுதியில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

தங்களின் கையெழுத்து இன்றி காவல்துறையினரே உடலை கொண்டு சென்றதாக இறந்தவர்களின் உறவினர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.

Presentational grey line

'வாசி' வானதி: மலைகளுக்கு நடுவே ஒரு சிறப்புப் பள்ளி #iamthechange

காணொளிக் குறிப்பு, ’வாசி’ வானதி: மலைகளுக்கு நடுவே ஒரு சிறப்புப் பள்ளி

இங்கு வகுப்பறைகள் என்று ஏதும் இல்லை. மரங்கள், பறவைகள், பூச்சிகள் எல்லாம்தான் ஆசான். அதனுடன் குழந்தைகளுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்தித் தரும் வேலையைத்தான் தான் செய்வதாக கூறுகிறார் வானதி.

Presentational grey line

மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசிய விவகாரம்: பா.ஜ.க. மாநில துணைத் தலைவருக்குத் தடை

திரவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு, திரவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராவார் என பேசிய பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவர் பி.டி. அரசகுமார் கட்சிக் கூட்டங்களிலும் ஊடக விவாதங்களிலும் கலந்துகொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

Presentational grey line

ஹைதராபாத் பாலியல் தாக்குதல்: "குற்றவாளிகளை கும்பல்கொலை செய்ய வேண்டும்" - ஜெயா பச்சன்

புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

ஹைதராபாத்தில் 27 வயது பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்குத்தண்டனை அளிக்கப்பட வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் குரல் எழுந்துள்ளது.

"இது கடுமையான ஒன்று என்பதை நான் அறிவேன். ஆனால், இது போன்ற குற்றவாளிகளை கும்பல் கொலை செய்ய வேண்டும்" என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் வலியுறுத்தியுள்ளார்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: