டிரம்ப் - நரேந்திர மோதி தொலைபேசி உரையாடல்: பிராந்திய விவகாரம் பற்றி பேசியதாகத் தகவல்

பட மூலாதாரம், Getty Images
பிராந்திய விவகாரம் பற்றியும், இரு தரப்பு விவகாரம் பற்றியும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் அரைமணி நேரம் தொலைபேசியில் உரையாடியதாகத் தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.
டிவிட்டரில் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ கணக்கில் இதுபற்றிப் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி, உரையாடல் இதமாகவும், இணக்கமாகவும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பிராந்திய விவகாரம் பற்றிப் பேசும்போது, அதீத உணர்வெழுச்சியான பேச்சு, இந்திய எதிர்ப்பு வன்முறைகளைத் தூண்டுதல் ஆகியவற்றில் இந்தப் பிராந்தியத்தில் சில தலைவர்கள் ஈடுபடுவது அமைதிக்கு உகந்தது அல்ல என்று பிரதமர் தெரிவித்ததாக பிரதமரின் மற்றொரு டிவிட்டர் பதிவு தெரிவிக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பிராந்திய விவகாரம் குறித்து என்று அவர் கூறியிருப்பது, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமை நீக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள உறவுச் சிக்கலை குறிப்பது என்றே புரிந்துகொள்ளப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








