'சிரியா மீது இஸ்ரேல் இரவு நேரத்தில் வான் தாக்குதல்'

சிரியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிரியாவில் ஏற்கனவே உள்நாட்டுப் நடந்து வருகிறது. (கோப்புப்படம்)

தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சிரியா ராணுவம் கூறியுள்ளது.

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே, இரவு நேரத்தில் பெருத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக சிரியா கூறியுள்ளது.

"ராணுவக் கிடங்கு ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மூன்று ராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் பெரும்பாலான ஏவுகணைகள் தடுத்து அழிக்கப்பட்டுள்ளன," என்று சிரியா ராணுவத்தின் தரப்பில் அந்நாட்டு அரசு ஊடகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தரப்பில் இதுவரை யாரும் காயமடைந்ததாகவோ, சேதம் உண்டானதாகவோ தெரிவிக்கப்படவில்லை.

செவ்வாய் இரவில் டமாஸ்கஸ் நகரின் வான் பரப்பின் மீது நகரும் பொருள் ஒன்று தடுத்து அழிக்கப்படும் காட்சிகளை சிரியா அரசு ஊடகம் வெளியிட்டது.

இந்த வான் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

சிரியா, இஸ்ரேல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, செவ்வாயன்று இரவு நேரத்தில் டமாஸ்கஸ் நகரிலிருந்து வெளியாகும் புகை

விமானங்களை வானில் தாக்கி அழிக்கும் ஏவுகணை சிரியாவில் இருந்து ஏவப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

சிரியாவில் உள்ள இரான் மற்றும் ஹெஸ்புல்லா அமைப்பின் ராணுவத் தளங்களை, தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காக இஸ்ரேல் இதற்கு முன்பு பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

எனினும், அத்தகைய தாக்குதல்களை நடத்தியதாக அரிதாகவே ஒப்புக்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் உள்ள இரானின் அனைத்து பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கடந்த மே மாதம் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இது 2011இல் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியபின் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பாலத்தீனின் கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள இஸ்ரேலின் ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் அந்தத் தாக்குதலை நடத்தியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: