You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைதியில் மோசமான நிலநடுக்கம்: 10 பேர் பலி
ஹைதியின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தில் குறைந்தது பத்து பேர் பலியாகி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கமானது 5.9 அளவில் இருந்தது. 2010 ஆம் ஆண்டு அந்த கரீபியன் நாட்டை நிலநடுக்கம் தாக்கியதில் 2 லட்சம் பேர் மரணித்தனர்.
பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் உருகுலைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அதிபர் ஜோவ்நெல் மொயீஸ் நாட்டு மக்களை அமைதிகாக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அரசின் செய்தித் தொடர்பாளர், இந்த நிலையை எதிர்க்கொள்ள பேரிடர் மீட்புப் படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்