அணில் குட்டியிடம் இருந்து மனிதரை காப்பாற்றிய ஜெர்மனி காவல் துறை

ஒரு மனிதரை துரத்தி, பயமுறுத்திய குட்டி அணில் ஒன்றிடம் இருந்து அந்த மனிதரை ஜெர்மனி காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.

தூங்கிய அணில் குட்டி

பட மூலாதாரம், EPA/KARLSRUHE POLICE

படக்குறிப்பு, தாயை இழந்துவிட்ட அணில் குட்டிகள் தாய்க்கு மாற்றாக ஒரு மனிதரிடம் தங்களின் கவனத்தை திருப்பலாம்.

உதவி செய்ய அழைப்பு வந்தவுடன் விரைவில் வந்தடைந்த மேற்கு நகரான கார்ல்ஸ்ரூ அதிகாரிகள், உதவிக்கு அழைப்புவிடுத்தவரை ஒரு குட்டி அணில் பயமுறுத்தி கொண்டிருப்பதை கண்டனர்.

திடீரென அந்த அணில் குட்டி அயர்ந்து தூங்க தொடங்கியது. காவல்துறையினர் அதனை பாதுகாப்பாக பிடித்து, விலங்குகள் மீட்பு மையம் ஒன்றில் சேர்த்துள்ளனர்.

நன்மையை கொண்டு வருகின்ற புதிய அடையாளமாகியுள்ள இந்த அணிலுக்கு, 'கார்ல்-ப்ரீட்ரிச்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக இந்த சம்பவம் பற்றி அறிக்கையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அணில் குட்டி

பட மூலாதாரம், EPA/KARLSRUHE POLICE

படக்குறிப்பு, காவல்துறைக்கு நற்பெயரை கொண்டு வருகின்ற புதிய அடையாளமாக இந்த அணில் மாறியுள்ளது.

விலங்குகள் மீட்பு மையத்தில் இந்த அணில் குட்டி நன்றாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்டவரின் பல புகைப்படங்களோடு, கார்ல்ஸ்ரூ காவல்துறை ட்விட்டர் செய்தி பதிவிட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

தங்களுக்கு உணவோ, உதவியோடு தேவைப்படும்போது அணில்கள் மனிதரை துரத்தும் என்று அறியப்படுகிறது.

தங்களின் தாயை இழந்துவிட்ட அணில் குட்டிகள் தாய்க்கு மாற்றாக ஒரு மனிதரிடம் தங்களின் கவனத்தை திருப்பலாம் என்று காவல்துறையின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டினா கிரென்ஸ் 'கார்டியன்' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

"இது பயமுறுத்துவதுபோல தோன்றலாம். எங்களை தொலைபேசியில் அழைத்து உதவி கோரியவரும் சற்று பீதியடைந்திருந்தார்," என்று அவர் கூறினார்.

அணில் தாக்குதல்கள் எப்போதும் நன்மையானதாக இருப்பதில்லை.

அணில் குட்டி

பட மூலாதாரம், EPA/KARLSRUHE POLICE

படக்குறிப்பு, விலங்குகள் மீட்பு மையத்தில் இந்த அணில் குட்டி நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோபமாக இருக்கின்ற அணில்களிடம் இருந்து தங்களை காத்துகொள்ள வேண்டும் என்று புரோஸ்பெக்ட் பூங்கா பார்வையாளர்களை நியூ யார்க் அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் வழக்கத்திற்கு மாறாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஒரு வாரத்தில் 5 பேரை இந்த அணில்கள் தாக்கியிருந்தன.

கடந்த ஆண்டு பிரிட்டனின் கோர்ன்வாலில் ஆறு அணில்களால் கடிக்கப்பட்ட மூன்று வயது குழந்தை ஒன்று உடல் முழுவதும் ரத்தத்தோடு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :