ஒரு மணி நேரம் இருளில் மூழ்கிய உலகின் முக்கிய நகரங்கள் #EarthHour

பருவநிலை மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இப்புவியின் முக்கியமான தலங்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறை இருளில் மூழ்கும்.

இப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசார முறை 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டது. இப்போது இதனை 187 நாடுகள் கடைப்பிடிக்கின்றன. சனிக்கிழமை (மார்ச் 24) இரவு உலகெங்கும் முக்கிய தலங்கள் அனைத்திலும் விளக்குகள் அணைக்கப்பட்டது. இந்தியாவில் இந்தியா கேட் பகுதியில் விளக்குகள் அணைக்கப்பட்டன.

இந்தியா கேட், புது தில்லி

ஒபேரா ஹவுஸ் - சிட்னி, ஆஸ்திரேலியா

தேசிய அரங்கம் - பீஜிங், சீனா

பெட்ரொனஸ் டவர்ஸ் - கோலா லம்பூர், மலேசியா

தாய்பெய் 101 - தாய்பெய், தாய்வான்

சூப்பர் ட்ரீஸ் (SuperTrees) - சிங்கப்பூர்

கதீட்ரல் - மாஸ்கோ, ரஷ்யா

கொலோசியம் -ரோம், இத்தாலி

பர்தீனன் ஆலயம் - ஏதென்ஸ், கிரேக்கம்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: