You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாகிதாரி, பின் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மரணித்தார் .
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் துப்பாக்கியுடன் வெள்ளை மாளிகை வேலி அருகே வந்த ஒருவர், தன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு. பின் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்த துப்பாக்கி சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரியின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை
துப்பாக்கிதாரி தாக்குதல் நடத்திய போது, அவர் பெரும் மக்கள் திரளுக்கு மத்தியில் இருந்ததாக இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள வாஷிங்டன் போஸ்ட் கூறி உள்ளது.
ஃப்ளோரிடாவில் டிரம்ப்
சம்பவம் நடந்த சமயத்தில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இல்லை. அவர் ஃப்ளோரிடாவில் இருந்தார், அவரும், மெலினா டிரம்ப்பும் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலைதான் வாஷிங்டன் வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களாக வெள்ளை மாளிகை அருகே இது போன்ற பல பாதுகாப்பு மீறல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
அண்மையில், பிப்ரவரி 23 ஆம் தேதி அன்று, வெள்ளை மாளிகை அருகே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் ஒரு கார் மோதியது. இந்த சம்பவத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், பெப்பர் ஸ்ப்ரெவுடன் வெள்ளை மாளிகை வேலியை ஏறி குதித்தார் ஓர் இளைஞர்.
பிற செய்திகள்
- திரிபுரா: கம்யூனிஸ்ட் கோட்டையை தகர்த்தது பாஜக
- திரிபுரா: 25 ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சியை பா.ஜ.க. வீழ்த்தியது எப்படி?
- தாய்ப்பால் ஊட்டும் மாடலிங் பெண்ணின் படத்தை பிரசுரித்து சர்ச்சையை கிளப்பிய பத்திரிகை
- 'ஸ்பீட் டேட்டிங்' எனும் நவீன சுயம்வரம்: இந்தியாவில் பரவும் புதிய கலாசாரம்
- ஆப்பிரிக்கா: பிரான்ஸ் தூதரகத்தின் மீது தாக்குதல்
- "விழிப்புணர்வுக்காக பாலூட்டும் படங்களை வெளியிடுவது சரியே"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்