You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவுக்கு அளித்த ராணுவ ஒத்துழைப்பை பாகிஸ்தான் நிறுத்துகிறதா?
அமெரிக்காவிற்கு அளித்து வந்த புலனாய்வு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத குழுக்களை சமாளிக்க பாகிஸ்தான் தவறிவிட்டதாகக் கூறி அந்நாட்டிற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு உதவிகளை முழுவதுமாக அமெரிக்கா நிறுத்துயதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் குர்ரம் குர்ராம் டஸ்கிர் கான் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக போர் தொடுப்பதில் தன் முழு கடமையை பாகிஸ்தான் ஆற்றியுள்ளதாக குறிப்பிட்ட குர்ரம், அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானை அச்சுறுத்துவதை தவிர்த்து, தங்களுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்கா புதுப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் பாகிஸ்தான் ஒத்துழைத்த காரணத்தினால்தான அல் -கய்தா அமைப்பு நீக்கப்பட்டதாகவும் குர்ரம் தெரிவித்தார்.
முன்னதாக, ஆஃப்கான் தாலிபான் மற்றும் ஹக்குவனி குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை அந்நாடு மீது விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது.
பிற செய்திகள்:
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்