You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுறாவை காப்பாற்றிய பெண்ணின் துணிச்சல்
ஆஸ்திரேலிய பெண் ஒருவர், நீச்சல் குளத்தில் சிக்கிய சுறா மீனை பதட்டமில்லாமல் தூக்கி கடலில் விடும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிட்னியில் உள்ள நீச்சல்குளத்தில் மெலிசா ஹத்ஹையரின் தாயார் நீந்திக்கொண்டு இருந்த போது, மீனின் வால்களை பார்த்து தகவல் தெரிவித்த பிறகே, அந்த மீன் அங்கு சிக்கிக்கொண்டுள்ளது என்பதை மெலிசா உணர்ந்தார்.
அந்த `போர்ட் ஜாக்சன்` வகை சுறா மீன் துயரத்தில் இருந்தது போல தெரிந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
அவர் மீனை காப்பாற்றும் காணொளி, இணையத்தில் அதிகமானோரால் பார்க்கப்படுகிறது.
"அது ஒரு மழலை போல இருந்தது, அதை தூக்கி கடலினுள் விடுவது ஒரு பிரச்சனையாகவே இல்லை" என்று மெலிசா பிபிசியிடம் தெரிவித்தார்.
"நான் அதன் மீது தாவி, அதன் வால்களை எனது கால் முட்டியால் பிடித்து, பின்பு அதன் கழுத்து பகுதியை கைகளால் பிடித்து தூக்கினேன். பின்பு, யோசித்தேன், அதனால் என்னை தாக்க முடியவில்லையே என்று."
ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் கருத்துபடி, போர்ட் ஜாக்சன் வகை சுறாக்கள், ஒரு மீட்டருக்கும் குறைந்த அளவே இருக்கும் என்றும், அவை மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல என்றும் கூறுகிறது.
பெரிய அலைகளின் காரணமாக, கடலில் இருந்த அந்த சுறா மீன், பக்கத்தில் இருந்த நீச்சல்குளத்தினுள் விழுந்து இருக்கலாம் என சந்தேகிக்கும் மெலிசா, கடலினுள் விட்ட பிறகு அது வேகமாக நீந்தி சென்றது என்றார்.
அவர் மீனை காப்பாற்றும் காணொளியை பார்ப்போர், அவர் செய்தது, "ஆஸ்திரேலியர்களுக்கே இயல்பான ஒன்று" என்றும், "மிகவும் சிறந்தது" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திங்களன்று, க்ரொனுலா பகுதியில் இந்த சம்பவம் நடந்தது என்பதை, உள்ளூர் காவல்துறை உறுதி செய்துள்ளது
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்