You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரியா விவகாரம்: ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள்
வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனையை பற்றி விவாதிக்க அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பவையை அவசரமாக கூட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கொண்ட நடுத்தர ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக வடகொரியா தெரிவித்திருக்கிறது.
இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை தாங்கி செல்லும் சக்தியுடையது என்றும், இதற்கு புதிய திட எரிபொருள் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது என்றும் வட கொரியா தெரிவித்திருக்கிறது.
வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை சர்வதேச நாடுகளின் கண்டனத்தை பெற்றிருக்கிறது.
வட கொரியாவால் அதிகரித்து வருகின்ற பகைமையை தடுக்க, அதிபர் டிரம்ப் பசிபிக் பிராந்திய நாடுகளுடனான கூட்டணியை மீண்டும் செயல்படுத்துவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கின்றது.
இந்த ஏவுகணை ஏறக்குறைய 500 கிலோமீட்டர் சென்று ஜப்பான் கடலில் விழுந்துள்ளது.
வட கொரியா இந்த ஏவுகணையை செங்குத்தாக செலுத்தியிருப்பதாக தென் கொரியா கூறுவதால், இது இன்னும் அதிக தூரம் சென்று தாக்கக்கூடியதாக கருதப்படுகிறது.
அணு ஆயுதத்தை கொண்டு செல்லக்கூடிய ஏவுகணையை வடிவமைப்பதில் வட கொரியா இன்னும் பல ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் தகவல்களுக்கு:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்