"புல்வாமா தாக்குதலுக்கு மோதி அரசின் கவனக் குறைவே காரணம்" - ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்

பட மூலாதாரம், GETTY IMAGES/@SATYAPALMALIK6
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், பிரபல பத்திரிக்கையாளர் கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில், 2019ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசே பொறுப்பு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
2019இல் காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த வாகனம் மீதான தாக்குதல், நிர்வாக அமைப்பின் 'திறமையின்மை' மற்றும் 'கவனக்குறைவு' ஆகியவற்றின் விளைவாகும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்ததோடு, அவை உறுதியானவை என்றும் இதைக் கூறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்துத் தான் அஞ்சவில்லை என்றும் சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.
`ஊழல் ஒருபோதும் சகித்துக்கொள்ளப்படமாட்டாது’ என்ற பிரதமர் நரேந்திர மோதியின் கொள்கை குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ள மாலிக், பிரதமருக்கு ஊழல் மீது அதிக வெறுப்பு இல்லை என்று கூறினார்.
'தி வயர்' செய்தி இணையதளத்திற்கு அளித்துள்ள இந்த நேர்காணலில், 370-வது பிரிவின் நீக்கம், பாஜக தலைவர் ராம் மாதவ் தொடர்பான சர்ச்சைகள் குறித்தும் தனது கருத்தை வெளிப்படையாக மாலிக் தெரிவித்துள்ளார்.
சத்யபால் மாலிக் என்ன சொன்னார்?
2019 பிப்ரவரியில் காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நிர்வாக அமைப்பின் 'திறமையின்மை' மற்றும் 'அலட்சியம்' ஆகியவற்றின் விளைவு என்று செய்தி இணையதளமான 'தி வயர்'க்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
இதற்கு அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்போது ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக இருந்தார்.
சிஆர்பிஎஃப் தனது வீர்களை ஏற்றிச் செல்ல விமானத்தை வழங்குமாறு அரசிடம் கோரியதாகவும் ஆனால் உள்துறை அமைச்சகம் அதைச் செய்ய மறுத்ததாகவும் மாலிக் கூறினார்.
மேலும், சிஆர்பிஎஃப் வாகன அணி செல்லும் வழியில் அரசு, உரிய பாதுகாப்பு சோதனை நடத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பட மூலாதாரம், @SATYAPALMALIK6
'அமைதியாக இருங்கள்' என்று கூறிய பிரதமர் மோதி
தாக்குதலுக்குப் பிறகு ஜிம் கார்பெட் பூங்காவில் இருந்து பிரதமர் மோதி தன்னை அழைத்தபோது இந்த விவகாரங்களை அவரிடம் எழுப்பியதாக சத்யபால் மாலிக் பேட்டியில் கூறினார். இது குறித்து யாரிடமும் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்குமாறு பிரதமர் மோதி தன்னைக் கேட்டுக் கொண்டார் என்றும் மாலிக் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இதையே தன்னிடம் கூறியதாக மாலிக் கூறினார்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது பொறுப்பைச் சுமத்தி, தேர்தல் ஆதாயம் பெறுவதே அரசின் நோக்கம் என்பதைத் தான் அப்போது உணர்ந்ததாக இந்தப் பேட்டியில் மாலிக் குறிப்பிட்டார்.
உளவுத்துறையின் தோல்வியே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றும் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் இருந்து 300 கிலோ ஆர்.டி.எக்ஸ் ஏற்றிய ஒரு டிரக் ஜம்மு காஷ்மீரில் 10 முதல் 15 நாட்களாகச் சுற்றித் திரிந்ததாகவும் ஆனால் உளவுத்துறைக்கு அதுகுறித்து துப்புகூட கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜக தலைவர் ராம் மாதவ் மீதான பழைய குற்றச்சாட்டை சத்யபால் மாலிக் மீண்டும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், @SATYAPALMALIK6
ஒரு நாள் காலை ஏழு மணிக்கு ராம் மாதவ் வந்து, ஒரு நீர்மின் திட்டத்திற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு காப்பீட்டுத் திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்தால் அதற்கு ஈடாக 300 கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
`நான் எந்தத் தவறும் செய்ய மாட்டேன்` என்று கூறி அதை நிராகரித்ததாக மாலிக் குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீர் குறித்து பிரதமர் மோதி ’விஷயம் அறியாதவர்’ என்று கூறிய அவர், அந்த மாநிலம் குறித்து அவரிடம் தவறான தகவல்கள் இருப்பதாகத் தெரிவித்தார். மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தவறு என்றும் மாலிக் கூறினார்.
’ஊழல் ஒருபோதும் சகித்துக்கொள்ளப்படமாட்டாது' என்ற பிரதமர் நரேந்திர மோதியின் கொள்கை குறித்தும் மாலிக் கடுமையான கேள்விகளை எழுப்பினார். பிரதமருக்கு ஊழல் மீது அதிக வெறுப்பு இல்லை என்று அவர் கூறினார்.
சத்யபால் மாலிக்கின் இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளுடன் கூடவே வேறு பலரும் இந்தப் பேட்டியின் கிளிப்களை ட்வீட் செய்து சமூக ஊடகங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
#corrupt Pradhan mantri (பிரதம மந்திரி) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதற்குப் பதிலடியாக #சத்யநாசி_காங்கிரஸும் ட்ரெண்டாகி வருகிறது.

பட மூலாதாரம், @SATYAPALMALIK6
காங்கிரஸ் என்ன சொன்னது
காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், புல்வாமா தாக்குதலும், அதில் துணிச்சல் மிக்க 40 வீர்கள் வீரமரணம் அடைந்ததும், அரசின் தவறால் நடந்ததாக பிரதமர் மோதி மீது குற்றம்சாட்டியுள்ளது.
இந்த ட்வீட்டில், “நரேந்திர மோதி ஜி, புல்வாமா தாக்குதல் மற்றும் அதில் 40 துணிச்சலான வீரர்கள் வீரமரணம் அடைந்தது உங்கள் அரசின் தவறால்தான் நடந்தது.
நமது ஜவான்களுக்கு விமானம் கிடைத்திருந்தால், பயங்கரவாத சதி தோல்வியடைந்திருக்கும். இந்தத் தவறுக்கு நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால் இந்த விஷயத்தை நீங்கள் மூடி மறைத்தது மட்டுமல்லாமல் உங்கள் பிம்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்தீர்கள்.
புல்வாமா தாக்குதல் குறித்து சத்யபால் மாலிக் கூறியதைக் கேட்டு நாடு அதிர்ச்சி அடைந்துள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது ட்வீட்டில், "மோதி அவர்கள் ’அவதூறுக்கு’ பயப்படும் அளவிற்கு 'தேசிய இழப்பு'க்கு பயப்படவில்லை என்பது ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்த கருத்துகளில் இருந்து தெளிவாகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அதே நேரத்தில், “பிரதமர் ஊழலை அவ்வளவு அதிகமாக வெறுப்பதில்லை” என்று ராகுல் காந்தி எழுதியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
காங்கிரஸ் மக்களவை எம்பி மனீஷ் திவாரி ஒரு ட்வீட்டில், “ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கரண் தாப்பருடன் மிகவும் கவனமாக உரையாடியதை நான் பார்த்தேன். மாண்புமிகு முன்னாள் ஆளுநர் கூறுவது உண்மையாக இருந்தால் அது மிகவும் கவலையளிக்கிறது. இது நாட்டிற்கு வெளியே மிக மோசமான விளைவை ஏற்படுத்தும்,” என்று எழுதியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
"மோதி அவர்களே, கேஜ்ரிவால் ஊழல் செய்பவர் என்றால் உலகில் நேர்மையானவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். மோதிக்கு ஊழல் மீது அதிக வெறுப்பு இல்லை என்று சத்யபால் மாலிக்கும் கூறியுள்ளார். யார் தலை முதல் கால் வரை ஊழலில் மூழ்கியிருக்கிறார்களோ அவருக்கு ஊழல் எப்படி ஒரு விஷயமாக இருக்க முடியும்,” என்று ஆம் ஆத்மி கட்சி ட்வீட் செய்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
பிரபல செய்தியாளர் சகரிகா கோஷ் ட்விட்டரில், "பலர் தனிப்பட்ட முறையில் கூறியதை ஜம்மு காஷ்மீரின் கடைசி ஆளுநர் சத்யபால் மாலிக் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். புல்வாமா தாக்குதல் சுதந்திர இந்தியாவின் மிக மோசமான பாதுகாப்பு குறைபாடு. இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் இறந்தனர்,” என்று தெரிவித்துள்ளார்.
"ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் புல்வாமாவின் பின்னணியில் உள்ள பொய்களை மிகவும் நேர்மையான பேட்டியில் அம்பலப்படுத்தினார். ஆர்எஸ்எஸ்காரர், அதானிக்காக எப்படி லஞ்சம் கொடுக்கிறார் என்றும் சொல்லப்பட்டுள்ளது,” என்று திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட சில முக்கிய ஊடக நிறுவனங்களில் இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளதாகக் கூறிய அவர், "இந்திய ஊடக அமைப்புகள் எப்போது வரை இப்படி பயந்து பயந்து செயல்படும்", என்றார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் ஊடகங்களை கிண்டல் செய்து"புல்வாமா தாக்குதலின் உண்மை குறித்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநரும் பாஜக தலைவருமான சத்யபால் மாலிக் வெளியிட்ட உண்மைகளை இந்தியாவில் உள்ள எத்தனை தேசியவாத ஊடகங்கள் பிரைம் டைமில் விவாதிக்கின்றன? யாராவது இதைச் செய்கிறார்களா?'' என்று கேள்வியெழுப்பினார்.
சத்யபால் மாலிக்கின் மற்றொரு பேட்டியின்போது பாஜக தலைவர் ராம் மாதவ் மீது அவர் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து பிரபல பத்திரிகையாளர் ரவீஷ் குமார், ட்வீட் செய்துள்ளார்.
"நீங்கள் விழித்திருக்கிறீர்களா? நான் ஒன்று கேட்க வேண்டும். சத்யபால் மாலிக்கிற்கு ராம் மாதவ் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது எதற்காக? இந்த விவகாரத்தில் சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ள நிலையில் விசாரணைக்கு தயார் என்று அதற்கே கடிதம் எழுதியிருக்கலாம். உங்களால் கேட்க முடியவில்லை என்றால், நான் கேட்க வருகிறேன்!” அவர் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ட்விட்டரில், "பரபரப்பானது! கட்டாயம் பாருங்கள்! மோதியுடனான அவரது அனுபவம் குறித்து மோதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஒரு அதிரடி நேர்காணல்” என்று எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதியை குறி வைத்து சுவாதி சதுர்வேதி, "காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் கூற்றுகளில் ஒரு துளி உண்மை இருந்தால்கூட, நீங்கள் நமது வரலாற்றில் மிகவும் 'தேசதுரோக' அரசை நடத்துகிறீர்கள்’. இதை ட்வீட் செய்யும்போது நான் மிகவும் வேதனை அடைந்தேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 7
ஸ்வீடனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான அஷோக் ஸ்வைன் இந்த நேர்காணலின் ஒரு பகுதியை ட்வீட் செய்துள்ளார்.
“2019 பொதுத் தேர்தலுக்கு முன்பு, பாகிஸ்தானுக்கு எதிரான போர் போன்ற சூழ்நிலைக்கு மோதி இந்தியாவை அழைத்துச் செல்வார் என்று 2018 டிசம்பரில் நான் கணித்திருந்தேன். தேர்தலுக்கு முன் இப்படி நடந்தது. அது புல்வாமா.”
திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் அதிகாரியுமான ஜவஹர் சர்க்கார் தனது ட்வீட்டில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மோதியின் சொந்த ஆளுநர் சத்யபால் மாலிக், புல்வாமா துயரத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறுகிறார். மேலும் இது கவனக்குறைவின் காரணமாக நடந்தது. இந்தச் சம்பவம் 2019 தேர்தலில் வெற்றிபெற மோதிக்கு மிகவும் உதவியாக இருந்தது. இனி இந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிர காங்கிரஸ் சேவா தளம் தனது ட்விட்டர் பதிவில், “இங்கு மோதி அரசின் தவறை சத்யபால் மாலிக் அம்பலப்படுத்தியுள்ளார். ஆர்.டி.எக்ஸ் வருவதும் போவதும் பற்றிய தகவல்கள் இருந்தபோதிலும், மோதி அரசு ராணுவ வீரர்களை சாலை வழியாக அனுப்பியது. அவர் இந்தத் தீவிரவாத தாக்குதலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகித்தன,” என்று குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இது பொய் என்று கூறும் பாஜக
பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, சத்யபால் மாலிக்கை குறிவைத்து பல ட்வீட்களை பதிவு செய்துள்ளார்.
தனது முதல் ட்வீட்டில், இந்த நேர்காணலின் ஒரு பகுதியை அவர் வெளியிட்டார், அதில் சத்யபால் மாலிக் அமித் ஷாவை பற்றிய தனது முந்தைய கூற்றுகளில் ஒன்று தவறானது என்று கூறினார். பிரதமர் மோதியை பற்றி ஷா அப்படிச் சொல்லவில்லை என்றும் மாலிக் கூறினார்.
இது குறித்து மாலிக்கை கடுமையாக சாடிய மாளவியா, “பிரதமர் நரேந்திர மோதி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது தொடர்பாக பொய் சொன்னதாகவும் ஆதாரமற்ற கதைகளைச் சொன்னதாகவும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அவர் சுமத்தியபோதும் யாரும் அதை நம்பவில்லை. ஆனால் இது அவரது நம்பகத்தன்மை குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது,” என்று குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 8
அவர் மற்றொரு ட்வீட்டில், "உண்மையைச் சொல்வதில் சிறந்த விஷயம் என்னவென்றால், நீங்கள் கடைசியாகச் சொன்னதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை..." என்று கூறினார்
”காங்கிரஸ் தனது புதிய அன்பான சத்யபால் மாலிக்கை பற்றி உற்சாகமடைவதற்கு முன், ராகுல் காந்தியை பற்றி அவர் சொல்வதைக் கேளுங்கள்.”
"சத்யபால் மாலிக்கின் இந்த நேர்காணல், பிரதமரைப் பற்றி கதைகளை உருவாக்கியதை அவர் ஒப்புக்கொண்டபோது மோசமாகப் பின்வாங்கியது," என்று ரிஷி பாக்ரி என்ற பயனர் எழுதினார்.
மற்றொரு ட்வீட்டில் அவர், "இந்த வீடியோ ’தர்பார்’ பத்திரிகையாளர்கள் மத்தியில் பரவலாகப் பரப்பப்பட்டது. அறிக்கையை வாபஸ் பெறுவதாக அவர் கூறுகிறார். அவர் இப்போது மன்னிப்பு கேட்பாரா???” என்று எழுதியுள்ளார்.
”யஷ்வந்த் சின்ஹாவை சுற்றித் திரண்டவர்கள், இப்போது சத்யபால் மாலிக்கை சுற்றித் திரண்டிருக்கிறார்கள்” என்று பத்திரிகையாளர் ஷிவ் அரூர் விமர்சித்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












