மொராக்கோ நிலநடுக்கம்: நள்ளிரவில் நடந்தது என்ன? அதிர வைக்கும் காட்சிகள்

வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் வெள்ளி நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3:40) முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் பாதிப்பை விளக்கும் புகைப்பட தொகுப்பு பின்வருமாறு...

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: