இலங்கை: பிரதமர் அலுவலகம் முன்னே திரண்ட மக்கள்; கண்ணீர் புகைகுண்டு வீச்சு - விளக்கும் புகைப்படங்கள்

இலங்கையின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர்.

போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தப்பட்டது இருப்பினும் பாதுகாப்புப் படையினரை மீறி போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகம் உள்ளே நுழைந்தனர்.

இலங்கையில் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்திற்கு ஆணையிட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.

"நாம் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிய முடியாது. ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நாம் நிறுத்த வேண்டும்" என்றும் ரணில் தெரிவித்துள்ளார்.

தனது அலுவலகம் மற்றும் பிற அரசு அலுவலகத்தை கைப்பற்றியுள்ள போராட்டக்காரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணிலை பொறுப்பு ஜனாதிபதியாக நியமித்தது ஒரு 'கேலிக்கூத்து மற்றும் மோசமான ஒன்று' என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: