தங்கம் கடத்தல்: இலங்கையில் இந்தியர்கள் கைது; தாய்லாந்தில் இலங்கையர்கள் கைது

பட மூலாதாரம், Hindustan Times/Getty Images
கொழும்பில் உள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஆறு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக சென்னைக்கு பயணிக்க இருந்தபேோது இந்த சந்தேகநபர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக பெருமளவு தங்கத்தை இந்தியாவிற்கு கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
குற்றப்புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின்போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தின் வெளியேறும் நுழைவாயிலில் வைத்து முதலில் 4 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 1,060 கிராம் எடையுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1,370 கிராம் எடையுடைய தங்கத்துடன் இரண்டு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சுமார் இரண்டு கோடி இலங்கை ரூபாய் பெறுமதியான தங்கம் சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த இந்திய பிரஜைகள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைத் தந்திருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்திய பிரஜைகளிடம் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
9 இலங்கை பிரஜைகள் கைது
இதேவேளை, தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்க ஆபரணங்களை கொண்டு வர முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
தாய்லாந்து தலைசகர் பாங்காக் நகரிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த இரண்டு விமானங்களில் இந்த சட்டவிரோத தங்க ஆபரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் நான்கு கிலோகிராம் எடையுடைய ஆபரணங்களை கைப்பற்றியுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்களிடம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தற்போது விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












