இலங்கை அரசியல் நெருக்கடிக்கு தீர்வு: அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு

US Embassy - Sri Lanka

பட மூலாதாரம், US Embassy - Sri Lanka

இலங்கை அரசியலில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதை வரவேற்று, சர்வதேச நாடுகள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இலங்கையில் ஏற்பட்டிருந்த கொதிநிலை முடிவுக்கு வந்ததையடுத்து இன்று திங்கட்கிழமை, தமது வரவேற்பினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இது தொடர்பாக வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஜனநாயகத்தில் உறுதியும், அரசியலமைப்பில் இயல்பு நிலையும் ஏற்பட்டுள்ள இலங்கையின் இந்த வார அரசியல் முன்னேற்றத்தினை அமெரிக்கா வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

மேலும், அமெரிக்காவின் நல்ல நட்பு நாடு இலங்கை என்றும், இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் உறவினை மேம்படுத்துவதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும், அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளையில், இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு அரசியலமைப்புக்கு இணங்க அமைதியாகவும் ஜனநாயக ரீதியிலும் தீர்வு காணப்பட்டுள்ளதை வரவேற்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்; இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் ஸ்திரமின்மைக்கு அரசியலமைப்பு ஊடாகவும், இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களின் ஆர்பாட்டங்கள் மூலமாகவும் தீர்வு காணப்பட்டதற்கு ஆஸ்திரேலியா தமது வரவேற்பினைத் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் சமாதானத்தையும் சமரசத்தையும் சௌபாக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட தாம் எதிர்பார்ப்பதாகவும், ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: