You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாடு கடத்தாதீர்கள் - இலங்கை நீதிமன்றத்தில் ரோஹிஞ்சாக்கள் கோரிக்கை
தம்மை மியன்மாருக்கு நாடு கடத்தாமல் ஐக்கிய நாடுகள் சபையிடமோ அல்லது குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பிடமோ கையளிக்கும்படி இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ரோஹிஞ்சா இனத்தவர்கள் கோரியுள்ளனர்.
இவர்களது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய நாடுகள் சபையின் குடியேறிகளுக்கான அமைப்புடன் கலந்துரையாடவிருப்பதாக கைது செய்யப்பட்ட ரோஹிஞ்சா இனத்தவர்களுக்காக நீதிமன்றில் வாதிட்டுவரும் வழக்கறிஞர் ஷிராஸ் நூர்தீன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான அமைப்பில் தஞ்சம் கோரியிருந்த ரோஹிஞ்சா இனத்தவர்களில் முப்பது பேர், சட்டவிரோதமாக படகில் அஸ்திரேலியா சென்றுக்கொண்டிருக்கையில் இலங்கையின் கங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் பெண்கள் ஏழு பேர் மற்றும் 16 சிறார்களும் அடங்குவர்.
இவர்கள் தொடர்பான வழக்கு கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாண மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கும்படி சட்டமா அதிபர் ஆலோசணை வழங்கியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.
எனினும் தடுப்புக்காவலில் இருக்கும் ரோஹிஞ்சா இனத்தவர்கள் மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்தப்பட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்தாக அமையும் என்று அவர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இந்த வழக்கை 14 நாட்கள் ஒத்தி வைத்த நீதிபதி, ரோஹிஞ்சா இனத்தவர்களை மிரிஹானவிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள தடுப்பு முகாமில் தொடர்ந்தும் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்