You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை சூப்பர் கிங்ஸை எளிதாக வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: காரணம் என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிகெட் அணிகள் புதன்கிழமை மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எளிதாக வெற்றி பெற்றது.
முதல் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து மொத்தம் 132 ரன்களை எடுத்திருந்தது.
இந்த போட்டியில் மகேந்திரசிங் தோனி விளையாடவில்லை. ரெய்னா கேப்டனாக இருந்தார். டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் 79 ரன்கள் குவித்த நிலையில், ஒன்றன் பின் ஒன்றாக ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரெய்னா, ஜாதவ், பில்லிங்ஸ் சொதப்பினர். எனவே 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது,
133 ரன்கள் எடுத்தால் வெற்றி இரண்டாவதாக களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆடட்டக்காரர் வார்னர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு நம்பிக்கை அளித்தார்.
24 பந்துகளில் அரைசதம் கடந்த வார்னர் அடுத்த பந்தில் ஆட்டமிழக்கவும் செய்தார். 44 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த பேர்ஸ்டோவ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்,
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 16.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்