காமன்வெல்த் போட்டிகள்: இந்தியாவுக்கு மூன்றாவது தங்கப் பதக்கம்

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கப் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் 20 வயது பளுதூக்கும் வீரர் அச்சிண்டா செயுலி.

ஆடவர் 73கிலோ எடை தூக்கும் பிரிவில் அச்சிண்டா செயுலி மொத்தம் 313கிலோ எடையை தூக்கி பதக்கம் வென்றுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான காமன்வெல்த் மகளிர் டி20 லீக் ஆட்டத்தில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.

அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 42 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார்.

முன்னதாக ஆடவர் பளுதூக்குதல் 67 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் ஜெரிமி லால்ரினுகா.

ஜெரிமி லால்ரினுகாவுக்கு 19 வயது. இந்தியாவின் மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர்

இந்தியாவுக்கு கிடைக்கும் இரண்டாவது தங்கப்பதக்கம் இது.

இதுவரை இந்தியா மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது.

பதக்கம் வென்ற ஜெரிமி லால்ரினுகாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"நமது இளைஞர் சக்தி வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்றதோடு புதிய சாதனையை படைத்துள்ள ஜெரிமி லால்ரினுகாவுக்கு வாழ்த்துக்கள். அவர் இளம் வயதில் அதீத பெருமையை நாட்டிற்கு சேர்த்துள்ளார். அவரின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்." என பிரதமர் மோதி தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காமன்வெல்த் போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் மொத்தம் 201 கிலோ எடையை தூக்கி இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்தார் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு.

காமன்வெல்த் போட்டிகள் எங்கு எப்போது நடைபெறுகிறது?

2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: