You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிராவில் நிலச்சரிவு - மிக கனமழை ஏற்படுத்திய பாதிப்பால் குறைந்தது 36 பேர் பலி
மகாராஷ்டிராவின் தலியே கிராமத்தில் நிகழ்ந்த பெரும் நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்த 32 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள சுடர்வதி கிராமத்தில் 4 பேர் இறந்துள்ளனர்.
கடந்த 4 நாட்களாக மகாராஷ்டிராவில் தொடர்ந்து மிக கன மழை பெய்து வருகிறது.
அதுவும் கடந்த இரண்டு நாட்களாக கரையோர மாவட்டங்களான ரைகாட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய இடங்களில் தொடர் மழையால் நிலைமை மிகவும் மோசமானது. அப்பகுதியில் உள்ள வஷிஸ்தி, ஜக்புடி மற்றும் கஜலி நதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல கிராமங்களும் சிறு நகரங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் ஊடகங்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, ரைகாட் மாவட்டத்தில் 35 பேர் உயிரிழந்ததாக உறுதிபடுத்தினார். நிலச்சரிவில் பலரும் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தலியே கிராமத்தில் 32 பேரும், சுடர்வதி கிரமாத்தில் 4 பேரும் உயிரிழந்ததாக ரைகாட் மாவட்ட ஆட்சியர் நிதி சௌத்ரி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். நீர் சூழ்ந்த இடங்களில் உள்ள வீடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்க இந்திய கடற்படையின் உதவியும் நாடப்பட்டுள்ளது.
முற்றிலும் சேதமடைந்த சாலைகள், செல்போன் டவர்கள் சேத்ததால் தகவல் தொடர்பு பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மீட்புக்குழுவினர் பல தடைகளை சந்தித்து வருகின்றனர்.
எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த நிலை இன்னும் தெளிவாக தெரியவரவில்லை.
இந்நிலையில் மீட்புப் பணிகள் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரேவிடம், தொலைப்பேசி வாயிலாக இந்தியப் பிரதமர் மோதி விசாரித்தார்.
கடலோர மற்றும் மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் ஜூலை 22 முதல் 26 வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
பிற செய்திகள்:
- டோக்யோ ஒலிம்பிக்: தொடங்கும் முன்பே புதிய சாதனை, போட்டிகளை எப்படி பார்ப்பது?
- நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உளவு பார்க்கப்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
- பதக்கம் வெல்லவில்லை, 65,000 இதயங்களை வென்றார் - தன் தந்தையோடு ஒலிம்பிக் டிராக்கில் ஓடிய டெரிக் ரெட்மண்ட்
- சீனாவில் வெள்ளத் தாண்டவம்: சாலையில் குப்பையாய் குவிந்து கிடக்கும் கார்கள்
- பெகாசஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்ட துபாய் இளவரசிகள்- முழு விவரம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்