அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி; பிரணாப் தொடர்ந்து கவலைக்கிடம்

அமித் ஷா: மருத்துவமனையில் மீண்டும் அனுமதி. என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அதிகாலை 2.30 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென்று சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து குர்கானில் உள்ள மேதாந்தா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இரு வார சிகிச்சைக்குப் பிறகு அவரது பரிசோதனை முடிவில், வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டதால், வீடு திரும்பினார். எனினும், மருத்துவர்களின் அறிவுரைப்படி இரு வாரம் வீட்டுத்தனிமையில் அவர் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக உடல் சோர்வு மற்றும் உடல் வலி காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், திங்கள்கிழமை நள்ளிரவைக் கடந்த வேளையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது உடல்நிலையை எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில், அமித் ஷாவின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை ஊடகப்பிரிவு தலைவரும் மருத்துவருமான ஆர்த்தி விஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவிட்-19 வைரஸ் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் ஆக வந்த நிலையில், உடல் சோர்வு, மற்றும் உடல் வலி இருப்பதாக அமைச்சர் அமித்ஷா கூறி வந்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

மேலும், தற்போது அவர் செளகரியமாக இருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்தபடி பணிகளை செய்து வருவதாகவும் எய்ம்ஸ் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல் நலம் பெற விரும்பி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தேரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

பிரணாப் முகர்ஜி உடல்நிலை என்ன?

இதற்கிடையே, டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, தொடர்ந்து சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்ட நிலையில் இருப்பதாகவும், அவரது மருத்துவ நிலையில் எவ்வித மாற்றமும் காணப்படவில்லை என்றும் ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா: மருத்துவமனையில் மீண்டும் அனுமதி. என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

கடந்த வாரம் அவர் டெல்லி ராணுவ மருத்துமனையில் சேர்க்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட வழக்கமான உடல்நிலை முன் அறிதல் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது. மேலும், ஆகஸ்ட் 11-ஆம் தேதி அவருக்கு மூளையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. எனினும், உயிர் காக்கும் சுவாசக் கருவிகள் உதவியுடன் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, மகன் அபிஜித் முகர்ஜி ஆகியோர் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: