கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறும் தணிகாசலம் மீது நடவடிக்கை - தமிழக அரசு அறிவிப்பு

பட மூலாதாரம், Ka Thiruthanikasalam | Facebook
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டறிந்துவிட்டதாக பேசிவந்த ஒருவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அரசு அங்கீகாரம் பெறாத மருத்துவ நிலையம் நடத்திவரும் போலி மருத்துவர் திருத்தணிக்காசலம் என்பவர் மீது வழக்கு தொடுக்கவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்திவரும் க.திருத்தணிக்காசலம் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் தவறான செய்தியை பரவவிட்டு, பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருகிறார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மைய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவம் மற்றம் ஹோமியோபதித் துறை மூலம் சென்னை, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் ''கோவிட் - 19 எனும் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது,'' என்றும் தெரிவித்துள்ளது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

திருத்தணிக்காசலம் பேசியது என்ன?
கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறிய திருத்தணிகாசலம், அவர் கண்டறிந்த மருந்தின் மூலம், நோயாளியின் உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதால், கொரோனாவில் இருந்து குணம் பெற முடியும் என்றார்.
அவரது மருந்து குறித்த கேள்விகள் எழுந்தபோது, அவர் கண்டறிந்த மருந்தில் நிலவேம்பு, வெள்ளை எருகு மற்றும் கருங்காக்காலி வேப்பட்டை மற்றும் சில மருந்துகளின் கலவையாக இருக்கும் என்றும் அவரது மருந்து நோயாளிகளின் சுயநோய்எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் என்பதால் குணம் பெறமுடியும் என்றார்.
மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை ஒரே மருத்துவமனைக்கு மாற்றவேண்டும் என்றும் அவர்களுக்கு அரசு மருத்துவர்கள் சிகிச்சை தருவதோடு, அவர் கொடுக்கும் மருந்தையும் எடுத்துக்கொள்ளலாம் என்றார். அவர் பரிந்துரை செய்யும் மருந்தால் எந்த பின்விளைவும் வராது என்றும் கொரோனாவால் ஏற்படும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பண்பு இரண்டு அல்லது மூன்று நாட்களில் மாறிவிடும் என்றார். 10 நாட்களில் இந்தியாவில் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகளையும் குணமாக்கிவிடமுடியும் என்றார்.
தான் அளித்த மருந்தை ஸ்விட்சர்லாந்தில் உட்கொண்ட ஒருவர் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரது மருத்துவ படிப்பு குறித்த கேள்விகள் எழுந்தபோது, ''படிப்பிற்கும் கண்டுபிடிப்பிற்கு எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த 70 ஆண்டு காலத்தில், இந்தியா முழுவதும் சித்த மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வுகள் நடத்தி எந்தவிதமான மருந்துகளையும் இவர்கள் கண்டறியவில்லை. நான் சித்த மருத்துவக்கல்லூரியில் படிக்கவில்லை. ஆனால் என் மனைவி சித்த மருத்துவத்தில் எ.ம்டி படித்திருக்கிறார். சித்தர்கள் யாரும் கல்லூரியில் படித்தவர்கள் இல்லை. அகத்தியர், போகர், புலிப்பாணி சித்தர்கள் யாரும் இதுபோன்ற கல்லூரியில் படிக்கவில்லை,'' என்றும் காணொளியில் பேசியுள்ளார்.
பள்ளிக்கூடத்தில் இருந்து விரட்டப்பட்ட எடிசன்தான் ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்தார் என்றார். குறிப்பாக அவர் பரிந்துரை செய்த மருந்தை மதித்தால் சீனா பிழைத்துக்கொண்டது என்றும் இந்தியாவில் அவரது மருந்தை பயன்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

பட மூலாதாரம், Getty Images
அவரது காணொளியில், ''இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் ஸ்பெஷல் வார்டுக்கு என்னை விடுங்கள். அதனால் என் உயிருக்கு வரும் ஆபத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரே நேரத்தில் அங்குள்ள அனைத்து நோயாளிகளையும் தர முடியாது என்றாலும் கூட எனக்கு 5 நோயாளிகளை தாருங்கள். 48 மணி நேரம் காலஅவகாசம் கொடுங்கள். அந்த மருந்துகளை நான் சாப்பிட்ட பின்பே அந்த நோயாளிகளுக்கு கொடுக்கிறேன். என்னிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளை 48 மணிநேரம் கழித்து பரிசோதித்து பாருங்கள். அவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தால் அனைத்து நோயாளிகளையும் என்னிடம் தாருங்கள். கொரோனா வைரஸ் அச்சத்தால் மாஸ்க் விலை அதிகரித்து உள்ளது. அதை அணிவதால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாது. நான் கூறிய மருந்தை தற்போது சீனா பயன்படுத்திக்கொண்டிருக்கிறது,'' என்றும் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்தது ஏன்?
- மஹிந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - பிற எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
- இந்தியாவுக்கு சொந்தமான இடத்தில் பாகிஸ்தான் தேர்தல் நடத்துவதா? - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்
- கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்த பின் இந்தியா எந்த திசையில் பயணிக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












