You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திரயான் 3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ சிவன்
சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
புத்தாண்டு அன்று பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் 2 திட்டத்தை போன்றே சந்திரயான் 3 இருக்கும் என்றும், ஒரு சில மாற்றங்கள் இதில் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
"சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்படவில்லை என்றாலும், அதன் ஆர்ப்பிட்டர் இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கிறது. அடுத்த 7 ஆண்டுகளுக்கு அது அறிவியல் தரவுகளை அனுப்பும்" என்றும் சிவன் கூறினார்.
மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு ஜனவரி மூன்றாம் வாரத்தில் இருந்து தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தூத்துக்குடியில் இரண்டாவது ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவலையும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: