குடியுரிமை திருத்தம்: போராட்டத்தில் இந்தியா முழுவதும் கைது செய்யப்பட்டவர்கள் யார்?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் போராட்டங்கள் தீவிரமாகியுள்ள நிலையில், முக்கிய நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள். சிலர் கலந்து கொள்ள முயற்சி செய்தவர்கள்.

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான ராமசந்திர குஹா கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். பிபிசி இந்தியிடம் பேசிய அவர், ஒரு செய்தியாளரிடம் காந்தி குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது, காவல்துறையினர் தன்னை கைது செய்ததாக குறிப்பிட்டார். "என்னை எங்கேயோ கூட்டிச் செல்கிறார்கள்" என்று மெசேஜ் மூலம் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் செயற்பாட்டாளுருமான உமர் காலித் டெல்லி செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

டெல்லி மண்டி ஹவுஸ் பகுதியில் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீக்ஷித்தை காவல்துறையினர் கைது செய்தனர். "போராட்டத்தில் கலந்துகொள்ள செங்கோட்டை செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால் மண்டி ஹவுஸ் பகுதிக்கு வந்தேன்" என்று அவர் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் டெல்லி மண்டி ஹவுஸ் பகுதியில் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: