ஃபானி : ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபானி புயல்: மீட்புப் பணிகள் தீவிரம்

ஃபானி புயல் கரையை கடக்க தொடங்கியது - ஒடிசாவில் கனத்த மழை

புயல் கரையை கடக்கும் ஒடிசா மாநிலத்தில் கனத்த மழை பதிவாகி உள்ளது.

புவனேஸ்வரில் இருந்து வட கிழக்கே 200 கிமீ வேகத்தில் நகரும் ஃபானி, வலுவிழந்து தீவிர புயலாக மாறி வங்க தேசம் நோக்கி செல்கிறது.

சுற்றுலா மற்றும் கோயில் நகரமான பூரியில் மணிக்கு 175 கி.மீ என்ற வேகத்தில் சூறை காற்று வீசியது. இதனால் ஒடிசாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மின்கம்பங்கள், சாலைகள் என அனைத்தும் சேதமாகியுள்ளது.

அதே போல ஆந்திராவின் வடக்கு பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

மீட்புப் பணிகள் தீவிரம்

பட மூலாதாரம், PIB India / TWITTER

இதுவரை எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளதென்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள் .

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

புயலின் காரணமாக கிழக்கு கடற்கரையில் உள்ள இரண்டு முக்கிய துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. எட்டு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஃபானி புயல்

பட மூலாதாரம், Getty Images

புயல் கரையை கடக்கவிருக்கும் ஒடிசா பூரியில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 850 ஆண்டுகள் பழமையான ஜகநாதர் கோயிலும் இங்குதான் உள்ளது. இந்த புயலினால் கோயில் சேதமாகலாமென அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

ஜெகநாதர் கோயில்

பட மூலாதாரம், Getty Images

அந்த பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

7 போர்க்கப்பல், 6 விமானம்

கப்பற்படை, கடலோர காவல் படை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளன.

7 போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், 6 விமானங்கள் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளதாக கப்பற்படை தெரிவிக்கிறது.

ஃபானி புயல்

பட மூலாதாரம், Getty Images

பெருமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீரின் அளவு 5 அடி வரை உயரலாமென வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஃபானி புயல் கரையை கடக்க தொடங்கியது - பாதுகாப்பு பணியில் 7 போர்க்கப்பல்கள்

இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் கடந்த முப்பது ஆண்டுகளில் தாக்கிய புயல்களில் நான்காவது பெரிய புயல் ஃபானி.

2017ஆம் ஆண்டு தாக்கிய ஓக்கி புயலில் 200 பேர் பலியாகினர், நூற்றுக்கணக்கானோர் தம் வாழ்விடங்களை இழந்தனர்.

கனமழை

ஃபானி புயல்

பட மூலாதாரம், EUROPEAN PHOTOPRESS AGENCY

காலை 6 மணி நிலவரப்படி ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், இச்சாபுரம் பகுதியில் அதிகபட்சமாக 173.75 மி.மீ மழை பெய்துள்ளது. சோம்பேட்டாவில் 167 மி.மீ மழையும், மேல் பத்துபுரத்தில் 153.75 மி.மீ மழையும், கீழ் பத்துபுரத்தில் 131 மி.மீ மழையும், கவிட்டியில் 148 மி.மீ மழையும் பெய்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பத்துலட்சம் மக்களை தங்க வைக்க 850 தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஃபானி புயல்

பட மூலாதாரம், Getty Images

கடலோர காவல்படை, இந்திய கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

81 தொடர் வண்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் காலம் என்பதால் தேர்தல் ஆணையமும், அரசு துரிதமாக செயல்பட தங்களது விதிமுறைகளை தளர்த்தி உள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :