You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடக தேர்தல்: “ராகுல் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.“
கர்நாடக தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி. ஆனால், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க முயற்சி செய்து வருவது குறித்து, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமா? பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபடும் முயற்சிக்கு ஊக்கமளிக்குமா? என வாதம் விவாதம் பகுதியில் நேயர்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் அளித்த பதில்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.
ஃபேஸ்புக்கில் சரோஜா பாலசுப்பிரமணியன், "பாஜகவின் எதிர்க்கட்சிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி, அவர்கள் இன்னும் வலுவாக ஒன்று கூட இது ஒரு சந்தர்ப்பம். கடந்த தேர்தல்களிலிருந்து ராகுல் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை." என்கிறார்.
மேலும் அவரே, " ராகுல், மோடியுடன் மோதுவது வெறுந்தலையோடு மலை மீது மோதுவதற்கு சமம்." என்றும் பதிவிட்டுள்ளார்.
தமிழினி காமராஜ், இது 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்கிறார்.
எல்லாமே சந்தர்ப்பவாதம் தான் . இதே பின் வாசல் வேலைகளை கோவாவிலும் மேகாலயாவிலும் பா.ஜ.க செயல்படுத்தியது அதிலும் மேகாலயாவில் 21 தொகுதிகளை காங்கிரசும், 2 தொகுதிகளை பிஜேபியும் பெற்றது ஆனால் ஆட்சி அமைத்தது பி.ஜே.பி என்று பதிவிட்டுள்ளார் மணி முத்துராமலிங்கம்.
காங்கிரஸ் அந்தந்த மாநிலங்களில் உள்ள பலம் வாய்ந்த பெரிய பலமில்லாத சிறிய கட்சிகள் என அனைத்து கட்சிகளையும் அரவணைத்து விட்டு கொடுத்து போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக வாக்கு சீட்டு முறையை கொண்டு வர அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்பது பிபிசி நேயர் பெனைலின் கருத்து.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்