You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டெர்லைட் போராட்டம்: குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள் - கமல்ஹாசன்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்து வரும் போராட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக கடந்த நாற்பது நாட்களுக்கும் மேலாக அ.குமரெட்டியாபுரம் கிராம பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
இந்த ஆலை சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிறது. இந்த ஆலையால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது என்பது மக்களின் குற்றச்சாட்டு.
பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த கூட்டத்தில் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் கலந்துக் கொண்டனர் என்கின்றனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர்.
மக்கள் செய்வார்கள்
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன், "நான் ஓட்டுக்காக இங்கு வரவில்லை. நான் அரசியல்வாதியாகவோ அல்லது திரைப்பட நடிகனாகவோ இங்கு வரவில்லை. ஒரு தனிமனிதனாக வந்துள்ளேன்." என்றார்.
மேலும் அவர், "மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை. மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை. என் குரல் எங்கெல்லாம் கேட்குமோ அங்கெல்லாம் இந்த பிரச்சனை குறித்து என் குரலை எழுப்புகிறேன்" என்றார்.
"மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும். குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள்" என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
பிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டி சென்னை மந்தைவெளி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
அது குறித்த செய்திகளை படிக்க:
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்