எங்களிடம் உதவி வாங்கிக்கொண்டு எங்களையே ஏமாற்றுகிறது பாகிஸ்தான்: டிரம்ப்

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

சமீப ஆண்டுகளில், அமெரிக்காவிடம் இருந்து பல பில்லியன் டாலர் பணத்தை உதவியாகப் பெற்றபோதிலும், பாகிஸ்தான் அமெரிக்காவிடம் பொய் கூறுவதாகவும், ஏமாற்றுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட அமெரிக்க படைகளால் தேடப்பட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்ததாக தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுக்கு அனுப்பாமல் தாமதப்படுத்தப்பட்ட 250 மில்லியன் டாலர் பணத்தை நிறுத்திவைக்கலாமா என்பதை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

தீவிரவாத்திற்கு எதிரான போரில் சர்வதேச நாடுகளின் முயற்சிக்கு பாகிஸ்தான் உதவியளிக்கும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அப்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :