You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#வாதம் விவாதம்: ''ஜெயலலிதா பற்றிய உண்மையை ஒருநாள் சொல்லித்தானே ஆக வேண்டும்''
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என அறிக்கை வெளியிட்டதாக அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியிருந்தார்.
இந்நிலையில்,'' பொதுமக்களிடம் உண்மையை மறைத்தது சரியா? சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அவர்கள் செய்தது சரியா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு பிபிசி நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே....
''உண்மையை மறைத்தது தவறு'' என ஹமி கூறியுள்ளார்.
''எது ஆனாலும் மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட தலைவர் பற்றி மக்களுக்கு சொல்லி இருக்கவேண்டும்''என்பது கார்த்திகேயனின் கருத்து.
''என்றாவது ஒருநாள் உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும். அப்போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாதா? நமது காவல்துறை நிலை அவ்வளவு மோசமாகவா உள்ளது?'' என சுரேஷ் கேள்வி எழுப்புகிறார்.
''சட்டம் ஒழுங்கு பாதிக்கபடும் என அரசாங்கம் அறிவிப்பு கொடுத்திருந்தால் அப்போலோ மருத்துவமனை அப்படி அறிக்கைவிட்டது தவறில்லை'' என்கிறார் பாலாஜி.
''உள்ளவாறு சொல்லியிருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் இருந்தார்கள்.'' என கூறுகிறார் மணி.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்