You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக கூறியது பொய்; அமைச்சரை வறுத்தெடுக்கும் 'நெட்டிசன்ஸ்'
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் இட்லி சாப்பிடுவதாக தான் முன்னர் கூறிய தகவல் முழுவதும் பொய் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்றைய தினம் கூறியிருந்த நிலையில், இணைய பயன்பாட்டாளர்கள் அவரை நையாண்டி செய்து கருத்துக்களை பதிந்து வருகின்றனர்.
மதுரையில் வெள்ளிக்கிழமை நடந்த அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சீனிவாசன், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் அதிமுகவினர் யாரும் அவரை சந்திக்கவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,''நீங்கள் நம்பவேண்டும் என்று நாங்கள் பல செய்திகளை சொல்லியிருப்போம். ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என நாங்கள் சொன்னது முழுக்கப் பொய். கட்சியின் ரகசியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் பொய் சொன்னோம்,'' என்று கூறி தனது கைகளை உயர்த்தி, மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் பெரும் கேலிக்கு உள்ளாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் கருத்துக்களையும், மீம்ஸ்களையும் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்